"அது தான அத்தான் நமக்கு வேணும்? நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் நினைச்சிட்டே வாழுறது கூட நல்லா தான் இருக்கும்? ஆனா நீங்க போனும்னா எனக்கு ஒரு கண்டீசன் இருக்கு"
"கண்டிசனா? என்ன டா குட்டி?"
"எனக்கு வீடியோ மொபைல் வேணும். நீங்க அங்க இருக்குற வேலைல எனக்கு பேசிட்டே இருக்கணும்னு சொல்லலை. ஆனா ஒரு அஞ்சு நிமிசமாவது என்கிட்ட பேசணும். எனக்கு தினமும் உங்களை பாக்கணும். அதுக்கு சரின்னா நீங்க போகலாம்"
"நானே உனக்கு மொபைல் வாங்கி கொடுக்க தான் டி நினைச்சேன். ஆனா இப்படி ஒரு சூழ்நிலைக்கு வாங்கணும்னு எதிர் பாக்கலை. கண்டிப்பா வாங்கி தரேன். தினமும் உன்னை பாக்காம என்னாலயும் இருக்க முடியாது மா. அதனால தினமும் போன் பண்ணுவேன் சரியா?"
"மூணு நாள் நாலு நாள் சேர்ந்து லீவ் கிடைச்சா இங்க வந்துருவீங்க தான அத்தான்?"
"கண்டிப்பா கன்ணம்மா"
"ஆமா, இது உங்களுக்கு அன்னைக்கே தெரியும்னா எதுக்கு எங்க கிட்ட சொல்லலை?"
"இல்லை டி, அன்னைக்கு ஷியாம் சும்மா பிரிவை பத்தி பேசினானா? அடுத்த நாளே இதை பத்தி சொன்னா அவன் அப்படி சொன்னதுனால தான் இப்படி ஆகிட்டோன்னு பீல் பண்ணுவான். அதனால தான் சொல்லலை. அது மட்டுமில்லாம உன்னோட கண்ணீரை பாக்க பயந்து தான் உன்கிட்டயும் சொல்லலை டி"
"நீங்க கண்ணீரை துடைக்கிறதா இருந்தா நான் எப்பவும் அழுதுட்டு இருக்க ரெடீ அத்தான்", என்று சொன்னவளின் கன்னத்தை இரு பக்கமும் கை வைத்து பிடித்து கொண்டு அவள் கண்களுக்குள் உற்று பார்த்தான் சூர்யா.
"இவ்வளவு காதலை என் மேல வைக்கிறதுக்கு நான் என்ன டி உனக்கு செஞ்சேன்?"
"நீங்க செஞ்சது ரொம்ப ஏராளமா இருக்கு அத்தான்? என் தலையை கோதி விட்டு, சாப்பாடு ஊட்டி, நெஞ்சில் சாய்த்து ஆறுதல் சொல்லி எனக்கு அம்மாவா இருக்கீங்க? இதை இதை இப்படி செய். இது சரியா வராதுன்னு அட்வைஸ் பண்ணி ஒரு வழிகாட்டியா எனக்கு அப்பாவா இருக்கீங்க? எனக்கு புடிச்சது எது புடிக்காதது எதுன்னு தெரிஞ்சு வச்சு நல்ல நண்பனா சகோதரனா இருக்கீங்க? அது மட்டுமில்லாம உங்க மனசுல உள்ள மொத்த காதலையும் என் மேல கொட்டி நல்ல காதலனா இருக்கீங்க? இதை விட ஒரு பொண்ணுக்கு வேற என்ன வேணும் சொல்லுங்க?"
"ஹா ஹா, எல்லாத்தையும் சொல்லிட்ட? ஆனா என்னை பாக்க உனக்கு புருசனா தெரியலையா டி?"
"அது தான் படிச்சு முடிச்ச அப்புறம் தான் ஹஸ்பண்டா இருப்பேன்னு சொல்லிட்டிங்களே?", என்று வெட்கத்துடன் சிரித்தாள் மதி.
"ஹ்ம்ம் எனக்கு மட்டும் ஆசையா என்ன? நீ சொல்றததுல ஒரு விசயம் மறுக்க முடியாத உண்மை கலை. சத்தியமா என்னால உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டே விலகி இருக்க முடியலை டி. ரொம்ப தவிப்பா இருக்கு. அதே நேரம் மனசலவுள உன்னோட ஒன்றவும் முடியல. அதுக்காகவே இந்த பிரிவு அவசியம் தான்"
"போங்க அத்தான், சரி என்னைக்கு கிளம்பனும்?"
"அடுத்த மாசம் மூணாம் தேதி டி "
"அப்பாடி இன்னும் ரெண்டு நாளில் போயிருவேன்னு சொல்லுவீங்களோன்னு பயந்துட்டேன். நல்லதா போச்சு உங்க வாசனையை இன்னும் ரெண்டு வாரத்துக்கு மேல நான் சுவாசிப்பேன்", என்று சொன்னவளை இழுத்து அனைத்தவன் அவளை தன் மீதே போட்டு கொண்டான்.
கேள்வியாக அவனை பார்த்தாள் கலைமதி. "ஷியாம் காவ்யாவோட நினைவுகளை சேகரிக்கணும்னு சொன்னது எதுக்குன்னு இப்ப தான் எனக்கும் புரியுது டி. எனக்கும் உன்னோட சேர்ந்து இருக்குற நினைவுகள் அதிகம் வேணும். நான் போற வரைக்கும் என் கூடவே இரு டி செல்ல குட்டி"
"கண்டிப்பா அத்தான். எனக்கும் இப்படி இருக்க தான் பிடிச்சிருக்கு"
"ஹ்ம்ம் கலை மா"
"என்ன அத்தான்?"
"அது வந்து? ரொம்ப வேண்டாம். கொஞ்சமே கொஞ்சம் எல்லை மீறிக்கவா ?", என்று கேட்டவனின் கைகள் அவள் வயிற்றில் ஊர்ந்து கொண்டிருந்தது.
"ஹான், போங்க"
"ஏன் டி ?"
"வேண்டாம் அத்தான். அப்புறம் ரொம்ப தேடும்"
"அதுவும் சரி தான். சீக்கிரம் உனக்கு படிப்பு முடியனும். அதுக்குள்ளே எனக்கு டிரெயினிங் முடிஞ்சிரும். அப்படியே முடியாம இருந்தாலும் நீ எக்ஸாம் எழுதிட்டு உடனே அங்க வந்துரு சரியா? அதுக்கு மேலயும் என்னால வெறும் முத்தம் மட்டுமே கொடுத்துட்டு இருக்க முடியாது செல்ல குட்டி"