“சாப்டியா ஹரி” என அவளும் “நான் இப்போ தான் லஞ்ச் சாப்பிட வந்தேன் நீ சாப்டியான்னு கேக்க தான் போன் செய்தேன் ஹனி” என அவனும் பேசிக் கொண்டிருந்ததை ஆர்சியும், கணேஷும் பூர்வியும் கவனித்தனர்.
“இதோ ரெண்டு பேரும் ஏதோ நளபாகம் செய்து வச்சிருகாங்க. நீ தப்பிச்ச” ஹரிணி சொல்லவும் ஹர்ஷா சிரித்தான்.
“நான் இங்க ஆர்சியோடு லஞ்ச் சாப்பிட வந்தேன்” என்றவன் பிறகு பேசுவதாக சொல்லி போனை வைத்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“அது யாரு ஆர்சி. அப்படி ஒரு பேரா” யோசித்தபடியே போனை வைத்தாள் ஹரிணி.
“அவங்க.. அன்னிக்கு மேரேஜ் ஆச்சே அவங்க தானே” ஆர்சி ஒரு தயக்கத்தோடு கேட்டே விட்டான்.
அன்றும் சாப்பிட்டாயா ஹரி என அவள் கேட்டது இவனுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. இன்றும் அதே உணர்வு. சிறிதும் மாற்றம் இல்லையே. இவர்களின் இந்த அழகிய பந்தத்தின் பார்வையாளனாக மீண்டும் இருப்பது குறித்து ஆனந்தம் கொண்டான்.
ஆனால் அது போல கணேஷுக்கு ஆனந்தம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை ஆனால் சந்தேகம் பிறந்தது.
“மோன் செர்ரி. எனக்கொரு டவுட். நீயும் பாஸும் ஏன் இன்னும் மேரேஜ் செய்துக்கல” அவன் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் ஹரிணி.
முடிவிலியை நோக்கி ...
{kunena_discuss:1137}