(Reading time: 37 - 74 minutes)

அர்ஜூனோ நிதானமாக அவர்கள் அருகில் வந்து நின்றான்.நான் என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே ராஜா வேகமாக அவர்கள் அருகில் வந்து டாக்டர் சார் வாங்க போகலாம் என்று அவசரமாக அர்ஜூனின் கைபற்றி இழுத்தான்.

ஒரு நிமிடம் இருங்க ராஜா சார்க்கு பதில் சொல்லிவிட்டு வருகிறேன் என்று கூறியவன்.சுவாதியை பார்த்து கொண்டே நான் புதிதாக இந்த ஊருக்கு வந்திருக்கும் டாக்டர் இதே தெருவில் அதோ.அந்த வீட்டில்தான் வாடகைக்கு வர போகிறேன் என்று கூற கேட்டு கொண்டிருந்த ராமின் முகம் விகாரமானது.

டாக்டர் சார் கேள்வி கேட்டாள் பெண்களை பார்த்துதான் பதில் சொல்வரோ என்று ராஜாவை பார்த்து கேட்ட ராம்.நீ கிளம்பு என்று அதிகாரமாக சுவாதியை போக சொன்னான்.அவளும் விட்டால் போதும் என்று சிட்டாக பறந்துவிட்டாள்.அவள் போவதை பார்த்து கொண்டிருந்த அர்ஜூனை பார்த்த ராம்.இங்க பாருங்க டாக்டர் சார் வந்த வேலை என்னவோ அதை மட்டும் பார்க்க வேண்டும்.பெண்களிடம் ஒழுக்கமாக பழகுங்கள்.ஏதாவது தவறாக என் காதுக்கு வந்தது அவ்வளவு தான் என்று மிரட்டிவிட்டு ராஜாவை பார்த்து சொல்லி வை என்று கூறி தன் வண்டியை எடுத்து கொண்டு சென்றுவிட்டான்.

வாங்க சார் இப்பதான் வந்தீங்க அதுக்குள்ள அவனிடம் வம்பு எதற்கு.என்னவோ இவன் பெரிய யோகியவான் போல உங்களுக்கு அட்வைஸ் செய்கிறான்.இது தான் கலிகாலம் போல என்று புலம்பிவிட்டு அர்ஜூன் தங்க பார்த்திருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வீடு பார்க்க பெரிய வீடாக இருந்தது.அதற்கு அர்ஜூன் என் ஒரு ஆளுக்கு எதற்கு இவ்வளவு பெரிய வீடு என்று கேட்டான்.இந்த ஏரியாவில் இது போல் ஒரு வீடு கிடைக்காது சார்.அதுமட்டும் இல்லாமல் ஹாஸ்பிட்டலில் இருந்து இந்த வீடு பக்கம்.வீட்டில் கூட நீங்கள் சிகிச்சை அளிக்கலாம் என்று கூற அர்ஜூன் ஒரு வழியாக ஒத்து கொண்டான்.

பைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு உள்ளே போய் வைத்த ராமை பார்த்த அர்ஜூன் இவன் ஏன் அந்த ஆளைபற்றி அப்படி சொன்னான் அவளிடம் வேறு அந்த ஆள் பேசி கொண்டு இருந்தானே என்னவென்று ராஜாவிடமே கேட்போம் என்று முடிவு செய்து அதை கேட்கவும் செய்தான்.

நீ ஏன் அந்த ஆளைபற்றி அப்படி சொன்னாய்.அவன் யார் என்று கேட்க அது ஒரு பெரிய கதை சார் நீங்க முதலில் ரெஸ்ட் எடுங்க ப்ரியா இருக்கும் போது பேசலாம்.நான் சென்று உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன்.நீங்கள் அதற்குள் குளித்துவிடுங்கள் என்றவன் வேகமாக வெளியேறினான்.

அர்ஜூனும் ராமைபற்றி யோசிக்காமல் வந்த அழுப்பு நீங்க குளிப்போம் என்று குளியலறை நோக்கி சென்றவன் மனதில் சுவாதியின் நினைவே வந்தது.சுவாதி என்றுதானே அவன் சொன்னான் நைஸ் நேம்.உன்னை மறுபடியும் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை வது என்று தனக்குள் கூறி கொண்டவனின் மனசாட்சி

என்ன வதுவா...... டேய் நீ இப்பதான் அவளை பார்த்தாய்,அதற்குள் செல்ல பேர் வைக்கும் அளவுக்கு வந்துவிட்டதா என்று கேலி செய்தது.

ஏய் நான் அவளை இப்போது தான் பார்த்தேன் என்று சொல்லாதே ஆறு மாதத்திற்கு முன்பே பார்த்து போட்டோவும் எடுத்து வைத்திருக்கிறேன்.என்ன பெயர், என்ன ஊர் என்று எதுவும் தெரியாமல் இருந்தது,இப்போது தெரிந்துவிட்டது அவ்வளவுதான்.அவள் என் காதலி.என் வருங்கால மனைவி நான் அவளை எப்படி வேண்டும் என்றாலும் கூப்பிடுவேன்,நீ உன் வேலையை பார் என்று அதன் தலையில் கொட்டி அடக்கினான்.அவள் நினைவுடனே குளித்து வந்தவனை சூடான இட்லியும் குருமா வாசமும் வரவேற்றது.

ராஜாவை பார்த்து சிரித்து பயங்கர பசி என்று கூறி சாப்பிட ஆரம்பித்தான்.பசி ஓரளவு சமன்பட்ட பின்பு சமையல் யாருடையது என்அம்மா சமைப்பது போலவே இருக்கிறது என்று கூறினான்.

ராஜா சிரித்து கொண்டே வீட்டு சமையல்தான் சார் அந்த அம்மா நல்லா சமைப்பாங்க.அவங்ககிட்டதான் வாங்கிட்டு வந்தேன் என்று கூற சாப்பிடுவதை நிறுத்திய அர்ஜூன் யாரிடமும் வாங்க வேண்டாம் ராஜா வீட்டில் நானே சமைத்து கொள்கிறேன்.மற்றவர்களிடம் இனாமாக எதுவும் வாங்குவது எனக்கு பிடிக்காது.நீங்கள் கடையில் வாங்கி வருகிறேன் என்று தானே சொன்னீர்கள் என்று கேட்டான்.

அந்த சுவாதி பொண்ணுதான் சார் கூப்பிட்டு கொடுத்தது.பதிலாக அவர்களின் அம்மாவின் உடல்நிலையை முழுவதுமாக செக் செய்ய வேண்டுமாம் என்று கூறினான்.முதலில் ராஜா சொன்னதை கேட்டு சந்தோஷபட்டவன் அவன் அடுத்து சொல்வதை கேட்டு ஆச்சரியபட்டு அவனிடமே கேட்டான் இது அவர்கள் வீடு தானே அவர்கள் நினைத்தாள்,சென்னை போன்ற பெரிய நகரத்தில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கே அழைத்து போகலாமே என்று கேட்டான்.

ராஜா எல்லாம் விதி சார் என்ன பணம் இருந்து என்ன புண்ணியம் வீட்டில் ஆண்பிள்ளை சரியில்லை என்றால் எல்லா கஷ்டமும் வரும்.நீங்கள் சாப்பிடுங்கள் டெஸ்ட் பண்ண நாளை காலை பதினோரு மணி போல் வர சொன்னது என்று சொல்லிவிட்டு விடுவிடுவென சென்று விட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.