காலையில் கண் விழித்த பவித்ரா வழக்கம்போல ஆதி அங்கு இல்லாமல் போக, எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள்.. நேற்று இரவே மரகதத்திடம் கேட்டு வாங்கி வைத்திருந்த கஷ்தூரி மஞ்சளை முகத்துக்கும் காலுக்கும் தேய்த்து குளித்து முடித்து, அவளுக்கு பிடித்தமான புடவையை நேர்த்தியாக கட்டி, ஈரம் சொட்டிய தலைக்கு ஒரு டவலை கட்டிகொண்டு கீழ இறங்கி வந்தாள்...
அவள் கீழ இறங்கி வரும் அழகை கண்டதும் மரகதம் அதிசயித்து நின்றார்...
“அப்படியே என் தங்கை வாணி மாதிரி இருக்கே பவி மா..காலங்காத்தாலயே மஞ்சள் தேய்ச்சு குளிச்சிட்டு அப்படியே அந்த மகாலட்சுமியே நேர்ல வந்த மாதிரி இருக்க.. சரி வா.. சாமிக்கு விளக்கேற்றி வைத்து இன்னைக்கு உன் கையால பூஜை பண்ணு என்று அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்றார
...
This story is now available on Chillzee KiMo.
...
. இது நம்ம கோயிலுக்கு முன்னாடி பூ வித்துகிட்டிருந்த கண்ணம்மா வோட பேய்தான்.. அவங்கதான் எப்பவும் இப்படி மஞ்சளை தேய்ச்சுக்குவாங்க.. ஆனால் அவங்க ரொம்ப சாப்ட் ஆச்சே.. இப்படி வயலன்ட் ஆ அட்டாக் பண்ண மாட்டாங்க..
அப்ப மஞ்ச தேய்ச்சு குளிக்கிற வேற பேய் யார்..” என்று மீண்டும் சீரியஷாக யோசித்தவள்