அவன் வரவும் அதே நேரம் நந்தினியும் தன் அறையில் இருந்து அவசரமாக வெளியில் வந்தாள்.. அவளும் குளித்து விட்டு தாவணி பாவாடை அணிந்து கொண்டு வந்தாள்.. இடையில் தாராளமாக இடைவெளி விட்டு அவளின் இடை முழுவதும் அப்படியே தெரியுமாறு அந்த தாவணியை கட்டி இருந்தாள்..
அவளின் அந்த கோலத்தை கண்டு மூவரும் முகம் சுழித்தனர்.. சரோஜாவும் தன் தங்கையின் உடையையும் அவள் கட்டி இருந்த விதத்தையும் கண்டு கண்ணால் அவளை ஜாடை காட்டி என்ன இது என்று கேட்க, நந்தினியும் அவளுக்கு கண்ணால் ஏதோ சைகை செய்தாள்..
சதாசிவமும் சரவணனும் காலையிலயே வெளியில் வேலை இருப்பதாக கிளம்பி சென்றிருக்க, மற்றவர்கள் காலை உணவிற்காக அங்கு வந்தனர்..
வழக்கம் போல நந்தினி ஓடி சென்று ஆதியின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, பவித்ராவும் ஜனனியும் மறுபக்கம் அமர்ந்து கொண்டனர்..
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு பின்னால் நடந்து கொண்டிருந்த ஜனனி பல்லை கடித்தாள்..
வந்தது என்னவோ நான்கு பேர் என்றாலும் அவர்கள் இருவர் மட்டுமே பேசி இல்லை கொஞ்சி கொண்டு வர,, ஜனனிதான் உள்ளுக்குள் பொருமி கொண்டிருந்தாள்.. பவித்ராவோ எதுவும் கண்டு கொள்ளாமல் அவள் பாட்டுக்கு அங்கு இருந்த மரங்களை ரசித்து கொண்டிருந்தாள்..