“ஆங்.. இந்த முறை கரெக்டா கண்டு பிடிச்சுட்டேன்.... இது காஞ்சனா பேய்தான்... அதுதான் மஞ்சள அள்ளி தேய்ச்சுகிட்டு நெத்தியில பெரிய பொட்டா வச்சுகிட்டு... என்று பேசியவள் பவியின் நெற்றியை பார்க்க, சற்றுமுன் பூஜை செய்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்திருக்க அது கரைந்து கொஞ்சம் பெரிதாக வந்திருக்க, அதை கண்ட ஜனனி
“ஆஹா... கன்பார்ம் ஆ இது காஞ்சனா பேய்தான்...
ஐயயோ.. அந்த பேய் நம்மள துரத்தி துரத்தில்ல அடிக்கும்... அதுவும் அந்த குட்டிபையன் பேய் சிக்கனை எடுத்து வாயில வச்சுகிட்டு
“சிக்கன் சாப்டிட்டு சுச்சா போகவா.. இல்லா சுச்சா போய்ட்டு சிக்கன் சாப்பிட வா..” னு மிரட்டற டயலாக் மறக்கவே முடியாது...
அண்ணி... நீங்களும் அது மாதிரி எதுவும் பண்ணிடாதிங்க.. நான் எதுவும் தப்பு பண்ணி இருந்தால் பேசி தீர்த்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
டு சமையலை தொடர்ந்தார்... அவர் இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்திருந்தால் பின்னால் வரப்போகும் விபரீதத்தை தடுத்து இருந்திருக்கலாம்....
மரகதம் சமையலை முடித்து பின் முன்று பேரும் டைனிங் டேபிலில் எடுத்து வந்து வைக்க, ஆதி அதற்குள் தன் ஓட்டத்தை முடித்து மேல சென்று குளித்து விட்டு கீழ வந்தான்..