“இல்ல.. வேணாம் அத்தை...அவர் சொன்ன மாதிரி இதெல்லாம் இங்கயே இருக்கட்டும்... என் மாமியார் மாமனார் ஆத்மா இங்கயே தான் இருக்கும் னு நினைக்கிறேன்...இதெல்லாம் இங்க இருக்கிறதுதான் சரி ....
உங்க ஆசைக்காக ஒன்னு எடுத்துக்கறேன் இப்ப போட மட்டும்... அப்புறம் கழட்டி இங்கயே வச்சுடறேன்... “ என்று சிரித்தவள் அதில் தேடி அந்த புடவைக்கு மேட்சாக ஒரு வைர அட்டிகையும் கொஞ்சம் மெல்லிசான தங்க ஆரத்தையும் எடுத்து கொண்டாள்...
“ஹ்ம்ம்ம்ம் சூப்பர் செலக்ஷன் பவித்ரா... இதே காம்பினேசன் தான் வாணியும் அடிக்கடி போடுவா... சரி.. நீ தயாராகி கீழ வா.. நான் போய் சரோஜாவையும் தயாராக சொல்றேன்..” என்று அந்த லாக்கரை பழைய படி மூடி அந்த சாவியை எடுத்து கொண்டு வெளியேறினார்...
பவித்ராவும் மீண்டும் ஒரு குட்டி குளியல் போட்டு பின் அந்த புடவையை நே
...
This story is now available on Chillzee KiMo.
...
கொதித்து கொண்டுதான் இருந்தது...
அதற்குள் மரகதம் “சரோ.. அஷ்வின் எங்க?? அவன ரெடி பண்ணிட்டியா?? “ என்று தன் பேரனை பற்றி கேட்க
சரோஜாவோ தன்னை அழகு படுத்துவதிலயே மணிக் கணக்காக நின்று கொண்டிருக்க, அவள் பையனை கண்டு கொள்ள வில்லை...
“இன்னும் இல்லை அத்தை... “ என்று முனகினாள்...