அந்த ஏக்கத்தை எல்லாம் தீர்த்து கொள்ள எண்ணி அவளுக்காக காத்திருந்தவன் அவள் உள்ளே வந்ததும் அப்படியே அள்ளி அணைத்து கொண்டான்...
பவித்ராவும் தன் கணவனின் இறுகிய அணைப்பில் இலகி குழைய ஆரம்பித்தாள்... அவளின் அந்த இலகிய நிலையை கண்டு அவள் கணவன் மேலும் முன்னேற, சரியாக அந்த நேரம் பவித்ராவிற்கு அவள் கண்ட அந்த காட்சியும் அதை தொடர்ந்து நந்தினி தோட்டத்தில் பேசிய பேச்சும் நினைவு வர
அவள் சொன்ன புருசனை கைக்குள்ள போட்டுக்கணும் என்றது நினைவு வர,
“பேசாமல் அவள் சொன்ன மாதிரி தன் வீராப்பை ஈகோ வை விட்டு கொடுத்திடலாமா?? “என்று யோசித்தாள்....
மறுநிமிடம்
“அப்ப நான் அவனிடம் தோத்தவளா ஆகிடுமே…அதோடு அந்த நந்தினிக்கு எனக்கும் என்ன வித்தியாசம்?? தாலி கட்டினாலும் இன்னும் அவன் மனதால் என்னை மனைவியாக ஏற்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சிகள் பறக்க, தன் கன்ன சிவப்பை கஷ்டபட்டு மறைத்துக் கொண்டு குனிந்தவாறே கட்டிலின் அருகில் வந்தாள்...
வரும் பொழுதே ஓரளவுக்கு தன்னை சமாளித்துக் கொண்டவள் அருகில் வந்து கட்டிலில் இருந்த பெட்சீட் மற்றும் தலையணையை எடுக்க, அவளையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தவன் எட்டி அவள் கையை பற்றியவன்