கையை நீட்டி ஆக்சனுடன் அவன் எதையோ அந்த பெரியவரிடம் பேசி கொண்டிருக்க, அப்பொழுது அடித்த மெல்லிய காற்றில் அவன் சிகை அழகாக பறக்க, அதை ஷ்டைலாக தன் கையால் அடக்கி கொண்டே நின்ற அவன் அழகையே ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் பவித்ரா...
மற்றவர்கள் ஏற்கனவே காரை விட்டு இறங்கியிருக்க, பவித்ரா மட்டும் இன்னும் இறங்காததை கண்டு உள்ளே எட்டி பார்த்த சரவணன் அவளை கண்டு கொண்டு
“ஹா ஹா ஹா....யாரோ நான் விடற ஜொள்ளுல பண்ணை மூழ்கிடும்னு கவலை பட்டாங்க.. இப்ப என்னடான்னா அவங்க கிட்ட இருந்தே ஜொள்ளு அருவியா கொட்டிகிட்டு இருக்கு...
பாத்துமா... பாவம் எங்க ஊர் மக்கள்... இந்த திருவிழா முடியற வரைக்கும் இந்த ஊரை மூழ்காம காப்பாத்து...“ என்று சரவணன் காருக்குள் தலையை விட்டு அவளை கிண்டல் அடிக்க,
“போங்க மாமா... “ என்று அவளும் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஊருக்கு வருவதில்லை என்றாலும் சரவணன் மூலமாக இங்கு நடப்பதை எல்லாம் அப்பப்ப கேட்டுக் கொள்வான்.. ஏதாவது உதவி தேவை என்றால் சரவணன் வழியாகவே செய்வான்..
அதனாலயே இந்த ஊரில் அவனுக்கு நல்ல மதிப்பு.. இன்றும் அந்த ஊர் தலைவரிடம் இன்னும் ஏதாவது செய்யனுமா?? என்பதை பற்றிதான் பேசி கொண்டிருந்தான்...