ஜனனி சொன்ன மாதிரியே கோவிலை சுற்றி வந்த பெண்கள் உள்ளே வரும்பொழுது ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு முதல் இடத்தை பிடிக்க வேகமாக உள்ளே வந்தனர்.. அதை ஜாடை காட்டி ஜனனி சிரித்தாள்...
அதற்குள் அந்த ஊர் தலைவர் ஆதியை முன்னால் அழைக்க, அவனும் தன் வேட்டியை இறக்கி விட்டு அவர் முன்னே சென்று நின்றான்... பூசாரி ஒரு தட்டில் இருந்த பரிவட்டத்தை கொண்டு வர, அந்த தலைவர் அதை எடுத்து ஆதியின் தலையில் வைத்தார்... பின் ஒரு மாலையை எடுத்து அவன் கழுத்தில் போட்டார்...
பவித்ராவையும் அழைத்து அவன் அருகில் நிக்க சொல்லி அவள் கையால் அவள் கொண்டு வந்திருந்த தட்டை எடுத்து கொடுக்க சொல்ல அவளும் அதே மாதிரி செய்தாள்...
அந்த பூசாரியும் அவள் தட்டை வாங்கி கொண்டு அதில் இருந்த தேங்காயை எடுத்து உடைத்து பூஜையை ஆரம்பித்து வைத்தார்...
ஆதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
நெற்றியில் வைத்து கொண்டாள்....
அந்த அம்மன் குங்குமத்தை எடுத்து தன் நெற்றியில் வகிட்டிலும் பின் தன் மாங்கல்யத்தை வெளியில் எடுத்து அதன் மீதும் வைத்து கொண்டாள்....
அதை கண்ட ஆதி இன்னுமாய் அவள் பக்கம் சாய்ந்தான்...
அந்த பூசாரி அடுத்தவர்களிடம் நகர, அருகில் நின்றிருந்த ஜனனி