பிரணவ்விற்கு கௌவுதமின் நண்பர்கள் மித்ராவைக் கடத்த முயன்ற அன்று கௌவுதமை மன்னித்துவிடும்படி போனில் வெண்ணிலா கெஞ்சியது நியாபகம் வந்தது. அவன் இதுவரை கடத்தலைப் பற்றி மித்ராவிடம் எதுவும் கூறவில்லை என்பதால் அதை மறைத்து "அது.. அதுதான் வெண்ணிலா சில சமயங்கள்ல கௌவுதமப் பத்தி பெருமையா சொல்லுவாளா அதச்சொன்னேன்" என்று சமாலித்தான்.
"ஓஓ...எப்படியோ நிலாவோட காதல் நிறைவேரப்போகுது. கௌவுதமுக்கு நிலாவவிட ஒரு நல்ல லயிப் பார்ட்னர் கிடைக்கமாட்டாங்க. அத கூடிய சீக்கிரத்துல அவரும் புரிஞ்சுப்பார்"
"எனக்கென்னவோ அவன் அத இப்பவே புரிஞ்சுக்கிட்டான்னுதான் தோனுது. ஏன்னா கல்யாணத்தப் பத்தி சொல்லும்போது நிலா முகத்துல அவ்வளவு சந்தோசம் தெரிஞ்சது. அதுமட்டுமில்லாம இனிமேல் குடிக்கமாட்டேன் சிகரட் பிடிக்கமாட்ட ... ந்தநாளுக்கு பங்களாவுல வேல பாக்குற எல்லாருக்கும் பரிசு கொடுப்பியாமே. அதுமட்டுமில்லாம அனாதை ஆசிரமத்துல இருக்குறவுங்களுக்கு விருந்து கொடுப்பியாமே"
This story is now available on Chillzee KiMo.
...
"ஆங்.. ஆமா ஆனா இத உங்களுக்கு யார் சொன்னது"
"நா ஹாஸ்பிடல்ல இருக்கும்போது கோபி அண்ணா சொன்னாங்க"