அவள் தலையைக் கோதிக்கொடுத்த கௌவுதம் அவளை இயல்பாக்க எண்ணி "காத்து நல்லா வீசுல பேபி வா கொஞ்ச நேரம் பால்கனில நிக்கலாம்" என்று பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு சிலு சிலு வென்று காத்தடித்துக் கொண்டிருந்தது.
"நாம தீபாவளிக்கு ஊட்டிக்கு போக முடியாது பேபி"
"ம்ம்...பரவாயில்லை கௌவுதம் அதுதான் சொன்னிங்களே தீபாவளிக்கு மறுநாள் முன்பை போகனும்னு மீட்டிங் முடிஞ்சதும் திரும்பி வந்துடுவிங்கள்ல"
"ம்ம்...ஒருநாள்ல வந்துடுவேன். வந்ததும் ஊட்டிக்குப் போகலாம்"
"ம்ம்..ஆங்..இத சொல்ல மறந்துட்டேன் பாருங்க. பொன்னியும் அழகேசனும் ஒரு பெண் குழந்தைய தத்து எடுத்துருக்காங்களாம் சொன்னாங்க"
"ஓஓ... நல்லது. எஸ்டேட்ல வேலையெல்லாம் ஒழு ... ு.
'அப்போ நான் வெண்ணிலாவைத்தான் காதலித்திருக்கிறேனா மித்ராவைக் காதலிக்கவில்லையா' என்ற வேள்விக்கு இல்லை என்றுதான் பதில் வந்தது அவன் மனதிடமிருந்து. அவன் ஒருநாளும் மித்ராவுடன் தன் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்ததுயில்லை என்று அப்போதுதான் நினைவிற்கு வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...