கௌவுதமால் அவன் சொல்வதை நம்பவே முடியவில்லை ஆயினும் அவனின் குரலில் இருந்த பதட்டம் அவன் பொய் கூறவில்லை என்பதைக் காட்ட கௌவுதமின் மூளை வேலை செய்வதை ஒருநிமிடம் நிறுத்திவிட அவன் என்ன செய்வது என்று தெரியாமல் சிலைபோல் நின்றுகொண்டிருந்தான்.
"கௌவுதம் கௌவுதம்" என்ற சிவாவின் அழைப்பில் உயிர்பெற்றான் "கௌவுதம் நாங்க இப்ப அங்கதான் போய்கிட்டிருக்கோம் நீ சீக்கிரமா வா" என்றான்.
கௌவுதம் உடனே தனக்குத் தெரிந்த அசிஸ்டன்ட் கமிஸ்னருக்கு போன் செய்து விசயத்தைக் கூறினான். அவரும் தான் உடனே ஆட்களை அனுப்புவதாகக் கூறினார்.
ஏர்ப்போர்டிலிருந்து தனது காரை எடுத்தவன் மின்னல் வேகத்தில் வீடுவந்து சேர்ந்தான்.
யார் யாரோ நின்றிருந்தனர் அவர்கள் யாரும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அவன் காரைப் பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து அவங்கள கட்டிப்போட எனக்கு உதவி பண்ணிங்க இல்லாட்டி அவங்க தப்பிச்சு ஓடியிருப்பாங்க. நல்ல வழில தொழில் செஞ்சு முன்னேரப்பாருங்க. வாங்கிக்கோங்க" என்று வெண்ணிலா கூறிய பிறகு கண்டிப்பாய் நல்ல முறையில் தொழில் செய்து ஒருநாள் பணத்தை திருப்பித் தந்துவிடுவோம் என்று கூறி வாங்கிச் சென்றனர்.