தவிப்போடு நின்றிருந்தவளை அந்த வழியே காரில் சென்றுக் கொண்டிருந்த சாத்விக் கவனித்தான்.
படப்படிப்புக்காக வெளியூர் சென்றிருந்த சாத்விக் தன் வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தான். அவனுடன் பன்னீரும் இருந்திருந்தார். ஓட்டுனரை அழைத்துச் செல்லாமல் தான் மட்டுமே காரை எடுத்துக் கொண்டு சென்றதால், இப்போது அவனே கார் ஓட்டிக் கொண்டு வந்தான். படப்பிடிப்புக்கு போன இடத்தில் புதுப்பட ஒப்பந்தம் பற்றி பேச இருந்ததால், பன்னீர் தான் அவனது கால்ஷீட் சம்பந்தமாக பார்த்துக் கொள்வதால், அவரை அழைக்கவே அவரும் ஊருக்குச் சென்றார்.
ஊரிலிருந்து திரும்பும்போது அவரையும் தன் காரில் அழைத்து வந்தவன், இருவர் மட்டும் தனிமையில் இருக்கவே, "அங்கிள் யாதவியை போய் பார்த்தீங்களா? அவ அங்க எப்படி இருக்கா? சந்தோஷமா இருக்காளான்னு விசாரிச்சீங்களா?" என்று பன்னீர் நல்ல தந்தை என்பது போல் யாதவி மீது அக்கறை கொண்டவனாக அவன் விசாரிக்க,
"அவ எப்படி இருந்தா என்ன தம்பி.. அந்த விபாகரனை நம்பி போனால்ல.. அவ நாசமா தான் போவா.." என்று சாபங்களை அள்ளி வழங்கினார்.
"அங்கிள் அவ உங்க பொண்ணு, இத்தனை நாள் வேணா நீங்க அவ மேல அக்கறையில்லாம இருந்திருக்கலாம், ஆனா இனியாவது மாறுங்க அங்கிள்.. நல்லப்படியா உங்க பொண்ணுக் கூட உறவு வச்சுக்கலன்னா கூட பரவாயில்ல.. இப்படி சாபமெல்லாம் விடாதீங்க.." என்று அவன் கூற,
"அட போங்க தம்பி.. என் பொண்ணு நல்லா இருக்கணும்னு நினைச்சு தான், அவ சினிமால நடிச்சா பிரபலாமாவா, வசதியா இருப்பான்னு நினைச்சேன்.. என்னோட பேச்சை கேட்டாளா? வேணாம்னு ஓடிப் போனால்ல, ஓடிப் போனவன் கூடயாவது சந்தோஷமா வாழ்ந்தாளா? அவனை விட்டிட்டு வந்தா, அதான் நடந்த கல்யாணத்தை கூட வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போனாளே, அப்படியிருக்க திரும்ப அந்த விபாகரன் கூப்பிட்டதும் ஏன் போகணும்? அந்த வாழ்க்கை அவளுக்கு நல்லாவா இருக்கும்? அவ ஓடிப் போனவன் கூட சேர்த்து வச்சு அவளை பேச மாட்டாங்களா?" என்று அவர் சொல்ல,
என்னவோ அந்த பேச்சு பிடிக்காததால், "அங்கிள் ஏதாவது தெரிஞ்சு பேசுங்க.. யாதவி யாரோடவும் ஓடி போகல, அவ என்னை தேடி தான் வந்தா.." எனவும் பன்னீர் அதிர்ச்சியாக பார்க்க,
"பின்ன யாதவியை எனக்கு எப்படி தெரியும்னு நீங்க நினைக்கிறீங்க அங்கிள்.. அவளை முன்னமே பார்த்து அவ மேல விருப்பப்பட்டது நான் தான், ஆனா என்னை நம்பி வந்த