ப்ரண்டா நினைச்சுக்கோ, வா.." என்று அழைத்தான்.
அவனுடன் செல்வது பற்றி அவளுக்கு ஒன்றுமில்லை, இப்போது அவனைப் பற்றிய எந்த சலனமும் அவள் மனதில் இல்லை, ஆனால் அவனோடு அங்கு வீட்டிற்கு காரில் சென்று இறங்கினால், அதற்கும் அர்ச்சனா ஏதாவது மோசமாக பேசலாம், இப்போது என்ன செய்வது என்பது போல் அவள் தயங்க,
அவளது தயக்கம் அவனுக்கு புரியவில்லையென்றாலும், அவனோடு வர அவள் விரும்பவில்லை என்பதை புரிந்துக் கொண்டவன், "அங்கிள் உங்க போன்ல இருந்து ஏதாவது கால்டாக்சி புக் பண்ணுங்க.. வண்டி வந்ததும் யாதவியை கொண்டு போய் வீட்ல விட்டுட்டு வாங்க.." என்று பன்னீரை பார்த்து அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே, ஏற்கனவே வானிலை மழை பெய்வதற்கு ஏற்றார் போல் இருக்க, இப்போது மழை தூற ஆரம்பித்தது.
"அய்யோ மழை வேற தூறுது.. டாக்ஸி புக் பண்ணி அது வரதுக்குள்ள ஒருவேளை மழை அதிகமானா என்ன செய்றது? பேசாம அதுவரைக்குமாவது காரில் வந்து உட்காரு யாதவி.." என்று அவன் சொல்லவும், அதற்கு அவள் அப்போதும் தயங்க,
"ஹே உனக்கு என்னத்தான் பிரச்சனை.. தம்பி எவ்வளவு பெரிய ஆக்டர்.. இப்போ அவரை யாராவது பார்த்தா கூட்டம் கூடிடும், உனக்காக பார்த்துக்கிட்டு தம்பி இங்க நிக்குது.. நீ பாட்டுக்கு திமிறா இருக்க.. அதான் நான் இருக்கேன் இல்ல.. ஒழுங்கா காரில் வந்து ஏறு.." என்று பன்னீர் அவளை பேசவும்,
அவர் பேசுவதையெல்லாம் அவள் ஒரு பொருட்டாக நினைக்கவில்லையென்றாலும், அவர் சொல்வது போல் அவள் இங்கு நிற்கும் வரை சாத்விக் போக மாட்டான் என்பது புரிய, நேராக வீட்டிற்கு சென்றால் தானே பிரச்சனை, பேசாமல் புவனாம்மா வீட்டிற்குச் செல்லலாம், அங்கு போனபின்பு விபாகரனை அழைத்து சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தவள்,
"வேணும்னா என்னை பாலா ண்ணா வீட்ல விட்டுடுங்க.." என்று அவனிடம் கூறினாள்.
அது உண்மையிலேயே சாத்விக் மனதை கஷ்டப்படுத்தியது. அவள் திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், அவன் அவள் வாழ்க்கையில் ஒரு நண்பனாக கூட இருக்க முடியாது என்ற உண்மையை அந்த நேரம் அவன் புரிந்துக் கொண்டான். இல்லை அவனை குறித்து அவளை யாராவது ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்த கஷ்டத்தை அவளுக்கு கொடுக்க கூடாது என்ற முடிவை மனதில் எடுத்துக் கொண்டவன், அவளிடம் தலையாட்டவும், அவளும் காரில் ஏறினாள். ஆனால் சுற்றி இருப்பவர்களும் அதை புரிந்துக் கொள்ள வேண்டுமே,
காரில் எந்தவித பேச்சும் யாருக்குமில்லாமல், அவளை பாலா வீட்டில் கொண்டு வந்து அவன்