உங்கப்பா, மதுரிமா சொல்றது போல சாத்விக்கை தான் இன்னும் உன்னோட மனசில் நினைச்சிக்கிட்டு இருக்கியா?
இது சந்தேகப்பட்டு கேட்கறதில்ல.. உன்னோட மனசை தெரிஞ்சிக்க நினைக்கிறேன்.. திரும்பவும் நானா ஒன்னு புரிஞ்சிக்கிட்டு உன்னை கஷ்டப்படுத்திட கூடாதில்லையா? அதான் உன்னோட முடிவை கேட்கிறேன். அதை வச்சு தான் நாம சேர போறோமா? இல்லை பிரிய போறோமான்னு முடிவு செய்யணும்.. இதுக்கு உடனே நீ பதில் சொல்லணும்னு இல்லை, நல்லா யோசிச்சுக் கூட சொல்லலாம்.." என்று அவன் பேச வேண்டியதை பேசிவிட்டு அவள் பதிலுக்கு காத்திருக்க,
"எனக்கு முடிவு சொல்ல ரொம்ப நாளெல்லாம் அவகாசம் வேணாம், இன்னைக்கு சாயந்திரம் என்னோட முடிவை சொல்றேன்.. அதுக்கு முன்ன நான் சாத்விக்கை பார்த்து பேசணும், அதுக்கு உங்க அனுமதி வேணும்.." என்று யாதவி கேட்டாள்.
"இதுக்கு என்னோட அனுமதி கேட்கணும்னு அவசியமில்லை. நீ யாரை வேணும்னாலும் எப்போது வேணும்னாலும் போய் பார்க்கலாம், நான் தப்பா நினைக்க மாட்டேன். உன்னோட முடிவை தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன் யது.. அது நான் விரும்பும் முடிவா இருந்தா சந்தோஷப்படுவேன்.." என்றவன், அவளை சாத்விக் வீட்டிற்கே அழைத்துச் சென்று வீட்டு வாசலில் இறக்கி விட்டு சென்றான்.
யாதவி சாத்விக்கிடம் என்ன பேசுவாள்? விபாகரனுக்கு என்ன முடிவை கூறுவாள்? காத்திருங்கள். அடுத்த அத்தியாயத்துடன் கதை நிறைவு பெறும், நன்றி.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}