(Reading time: 27 - 53 minutes)

விட, கார் சத்தம் கேட்டு ஒருவேளை யாதவியாக இருக்குமோ என்று புவனா வாசலுக்கு வந்தவர், முதலில் காரில் இருந்து இறங்கிய யாதவியை பார்த்து நிம்மதியோடு, 

"தேவி வெளிய கிளம்பும்போது மஞ்சுளாக்கிட்ட சொல்லிட்டு போகணும்னு தெரியாதா? உன்னை காணும்னு அவங்க விபாக்கிட்ட சொல்லி, அவன் உன்னை தேடிட்டு இருக்கான்.." என்றவர், அப்போதுதான் சாத்விக்கையும் பன்னீரையும் பார்த்தார்.

"நல்லா இருக்கீங்களா ம்மா.." என்று சாத்விக் அவரை விசாரித்தவன்,

"வீட்ல இருந்து பணம் கொண்டு வர யாதவி மறந்துட்டா போல.. ஈஞ்சப்பாக்கம் பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு இருந்தா.. அதான் நாங்க அழைச்சிட்டு வந்தோம்.." என்று நடந்ததை கூற,

"அப்படியா ரொம்ப நல்லதுப்பா.. இவளை காணும்னு விபா போன் செஞ்சு சொன்னதும், நான் பயந்துட்டேன்.. நல்லவேளை நீங்க பார்த்து கூட்டிட்டு வந்தீங்க.." என்று கூறியவர்,

"ரெண்டுப்பேரும் உள்ள வாங்க.." என்று அழைக்க,

"இருக்கட்டு ம்மா.. நேரம் ஆச்சு கிளம்பறோம்.." என்றவன் காரில் அமர, சரி என்று தலையை ஆட்டிய புவனாவும் விபாகரனிடம் விஷயத்தை சொல்வதற்காக வேகமாக உள்ளே செல்ல, அவர் பின்னாலேயே வீட்டுக்குள் நுழைய இருந்த யாதவியை, "கொஞ்சம் நில்லு.." என்று பன்னீர் தடுத்தார்.

பின் அவளை கொஞ்சம் தள்ளி அழைத்துச் சென்றவர், "இங்கப்பாரு இப்போதும் நீ கொஞ்சம் யோசிச்சு நடந்தா, நீ நல்லா இருக்கலாம், விபாகரனோட கல்யாணம் நடந்தாலும், சாத்விக் வேணும்னு தானே அவனை விட்டுட்டு ஓடிப் போன.. அப்போ சாத்விக்கிற்கு ஏதோ உன்னை கல்யாணம் செஞ்சுக்க முடியாத சூழ்நிலை, அதனால அப்போ அவன் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டான், ஆனா இப்போ வரைக்கும் உன்மேல உயிரா இருக்கான்..

ஆசைப்பட்டவன் கூட நல்ல வாழ்க்கை அமையும்போது பிடிக்காத விபாகரன் கூட எதுக்கு நீ இருக்கணும், சட்டப்படி உங்களுக்கு கல்யாணம் நடந்திருந்தாலும், 5 வருஷம் அவனை விட்டு பிரிஞ்சு தானே இருந்த.. அதை வச்சு ஈஸியா டைவர்ஸ் வாங்கிடலாம், அப்புறம் சாத்விக்கை கல்யாணம் செஞ்சுக்கிட்டா சந்தோஷமா இருக்கலாம்.. இங்கப்பாரு நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடு.. கல்யாணம் ஆகிடுச்சுன்னு பிடிக்காத வாழ்க்கையை எதுக்கு வாழணும்.." என்று சொல்லிவிட்டு பின் அவரும் காரில் ஏறவும், கார் கிளம்பிவிட்டது.

அதற்குள் விபாகரனை அலைபேசியில் அழைத்த புவனாவோ, "விபா யாதவி வீட்டுக்கு வந்துட்டா ப்பா.. என்னோட தான் இருக்கா.." என்று விஷயத்தை சொல்லவும்,

"அப்படியா ம்மா.. எங்க போனாளாம், அங்க எதுக்கு வந்திருக்கா, திரும்ப இந்த வீட்டுக்கு வர பிடிக்கலையா?" என்று அவன் கேள்விகளை கேட்க,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.