அவளோட நம்பிக்கையை காப்பாத்தாம, அவளை காதலிக்கலன்னு நான் தான் அப்போ அனுப்பிவிட்டேன். பாவம் ஏமாற்றத்தோட போனவ எந்த பிரச்சனையிலும் மாட்டிக்காம பாலாவோட வீட்ல பாதுகாப்போட இருந்தது எனக்கு எத்தனை நிம்மதி தெரியுமா?
திரும்ப அவளை பார்த்த நான், அவளை பத்தி முழுசா தெரிஞ்சிக்காம அவசரப்பட்டேன், ஆனா அப்போக் கூட யாதவியை தப்பா நினைக்காம, விபாகரன் அவளை மனைவியா ஏத்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம், உண்மையிலேயே அவர் கிரேட் தான், அவரை தப்பா பேசாதீங்க.. யாதவி கண்டிப்பா சந்தோஷமா இருப்பா.." என்று அவன் சொல்லிக் கொண்டு வந்த போது தான், யாதவியை பேருந்து நிற்குமிடத்தில் பார்த்தவன்,
"அங்கிள் அது யாதவி தானே.." என்றுக் கேட்க,
பன்னீரும் கொஞ்சம் உற்று பார்த்தவர், "ஆமா அவளே தான், இவ்வளவு பேசினீங்களே, பார்த்தீங்களா.. பெரிய பிஸ்னஸ் மேனோட பொண்டாட்டி பஸுக்கு காத்திருக்கா.. முன்ன அவளை ஏமாத்தியிருந்தாலும் இப்போ அவளை கல்யாணம் செஞ்சு நல்லப்படியா வாழ நினைச்சீங்களே, உங்களோட வந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?" என்று கேட்கவும், அவன் காரை யாதவிக்கு அருகில் கொண்டு நிறுத்தவும் சரியாக இருந்தது.
"காரை திறந்தவன், வெளியே வந்தால் அதுவும் யாராவது பார்த்தால் கூட்டம் சேரும் என்பதால், "யாதவி என்ன பஸ் ஸ்டாப்ல நிக்கற.. வீட்டுக்கா போகணும், வா ட்ராப் பண்றேன்.." என்று அழைக்க, பன்னீரோ சாதாரணமாக வேடிக்கைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தார்.
"இல்ல பஸ் வந்துடும் நான் போயிக்கிறேன்.." என்று அவள் மறுக்க,
"பார்த்தா இங்க பஸ் நிக்கற மாதிரி தெரியலையே.." என்று அவன் அந்த இடத்தைப் பார்த்து யோசனையோடு கூறினான்.
அதற்கு பன்னீரோ, "இங்க வெள்ளை போர்டு பஸ் மட்டும் தான் நிற்கும், எக்ஸ்ப்ரஸ், டீலக்ஸெல்லாம் கொஞ்சம் தள்ளி அடுத்த பஸ் ஸ்டாப்க்கு தான் போகணும், வெள்ளை போர்டு பஸ்ஸெல்லாம் எப்பயாச்சும் ஒன்னு தான் வரும்.." என்று பதிலளித்தார்.
அதைக் கேட்டுக் கொண்டவளோ, "ஓ அப்படியா.. நான் அந்த பஸ் ஸ்டாப்க்கு போயே பஸ் ஏறிக்கிறேன்.." என்று சொல்ல,
"யாதவி பஸ்ல போக வேண்டிய அவசியம் என்ன? ஏதாவது ஆட்டோல ஏறி போகலாமே.." என்று சாத்விக் கேட்டான். அதற்கு அவள் அர்ச்சனா பேசியதை தவிர்த்து, அப்போதைய தன் நிலையை சொல்ல,
"யாதவி உனக்கு பிரச்சனையில்லைன்னா, நாங்களே உன்னை ட்ராப் செய்றோம்.. என்னோட தனியா வரத்தானே தயக்கம், அதுதான் உங்க அப்பா இருக்காரே, உன்னோட ஒரு நல்ல