கொண்டிருந்தவர்கள், இப்போது திருமண செய்தியை அறிவித்தது பற்றி ரசிகர்களுக்கிடையில் இதே பேச்சசுகள் இருக்க, அவர்களது இரு குடும்ப சம்பந்தப்பட்டவர்களுக்கு இது சாதாரணமான விஷயமாக தான் இருந்தது.
வெகுநாட்களுக்கு பிறகு இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தனர். இதற்கு முன்பும் இருவரும் சேர்ந்து நடித்திருந்தாலும் நடிப்பில் தான் அவர்கள் கெமிஸ்ட்ரி வேலை செய்திருந்ததே தவிர, நிஜத்தில் அவர்கள் சரியாக பேசிக் கொண்டதே இல்லை, இப்போது யாதவி விஷயமாக இருவரும் பேசிக் கொண்டதால், அதில் நட்பானவர்கள் திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் போது நிறைய விஷயங்களை பேசி பகிர்ந்துக் கொண்டனர்.
இதில் தனிப்பட்ட முறையில் கொஞ்சம் பிரச்சனையிலும் இருந்தனர். வசந்தன் சாத்விக்கிற்கு தீவிரமாக பெண் பார்க்க, அவர் பணத்தின் அடிப்படையில் பெண் தேடுவதால் சாத்விக்கிற்கு அதில் சுத்தமாக விருப்பமில்லை.
மதுரிமாவிற்கோ அவள் அதிகம் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டாள் என்பதால், இப்போதெல்லாம் பட வாய்ப்பு குறைய அவளின் பெற்றோர்களோ பணத்திற்காக அவளை அப்படி நடிக்க சொல்லி வற்புறுத்த, பேசாமல் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு அமைதியாக இருந்துக் கொள்ள விரும்பினாள். இதைபற்றி இருவரும் பகிர்ந்துக் கொண்ட போது, அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கவே,
சாத்விக் தான் முதலில் மதுரிமாவிடம் திருமணம் செய்துக் கொள்ளலாமா? என்றுக் கேட்டான். மதுரிமாவிற்கும் அதில் சம்மதம் இருக்கவே,
"ஒரே ஒரு கண்டிஷனுக்கு மட்டும் நீங்க ஒத்துக்கிட்டா.. நான் உங்களை கல்யாணம் செய்துக் கொள்ள ரெடி.." என்று கூறினாள்.
"நடிப்பிலும் ஆர்வம் இல்ல.. அதனால் கல்யாணத்துக்கு பிறகும் நடிப்பேன்னு கண்டிப்பா சொல்ல மாட்டா.. பின்ன வேற என்ன கண்டிஷன்.." என்று சாத்விக் யோசிக்க,
"கல்யாணத்துக்கு பிறகு நான் நடிக்க மாட்டேன்.. வீட்டோட இருந்து உங்களையும் நமக்கு பிறக்கப் போகும் குழந்தைதையும் பார்த்துக்க போறேன்.. இதில் உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்க,
"உனக்கு என்ன விருப்பமோ அதை செய்யலாம்.." என்று அவனும் கூறிவிட்டான்.
பின் தங்கள் குடும்பத்தாரிடம் இருவரும் பேச, புவனாவிற்கும் பாலாவிற்கும் சம்மதம் தான், ஆனால் யாதவியின் பெற்றோர்கள் மறுக்க,
"இதுக்கு ஒத்துக்கிட்டீங்கன்னா.. இதுவரைக்கும் சேர்த்து வச்ச சொத்தெல்லாம் உங்களுக்கு