தான் ஒருத்தர் முகத்தையே ஒருத்தர் பார்த்திருப்பாங்க.. ஆனா மனமொத்த தம்பதியா வாழலையா?
அப்படியிருக்க நான் அவளை காதலிக்கிறேனே, அதேபோல அவளும் என்னை காதலிக்கும்படி என்னால செய்ய முடியாதா? அதுக்கு அவ ஒரு சந்தர்ப்பம் கொடுக்க மாட்டாளா? என் காதலை அவளுக்கு புரிய வைக்க அனுமதி கொடுக்கமாட்டாளா? இத்தனை வருஷமா அவளையே நினைச்சு ஏங்கிக்கிட்டு இருக்கும் எனக்கு காதல் பிச்சை போட மாட்டாளா? அவளுக்காக 30 வயசாகியும் பிரம்மச்சாரியா காத்துக்கிட்டு இருக்கேனே, என்னோட வாழ மாட்டாளா?" என்று அவன் வரிசையாக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
அவனை அணைத்து அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டவள், "அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னா அது என்னோட பெரிய பாக்கியம் விபு.." என்று கண்ணீரோடு கூறினாள்.
அவனும் அவளை அணைத்துக் கொண்டவன், "அந்த வாய்ப்பு உன்னை தவிர வேற யாருக்கும் கிடையாது.. என் வாழ்க்கையில் உன்னைத் தவிர எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது.. நான் முன்னமே சொல்லியிருக்கேன் இல்ல, நாம தான் சேரனும்னு கடவுள் முடிவு செஞ்சுருக்கார்.. அதனால் இதுபோல எப்போதும் பேசாத.. என்கிட்ட மதுரிமாவை கல்யாணம் செய்துக்க சொல்லி கேட்டது போல வேற யார்க்கிட்டேயும் பேசி வைக்காத.." என்றான்.
"ஆனா நான் முன்னயே இதுப்பத்தி மதுரிமாக்கிட்ட பேசிட்டேனே.." என்று அவனை அணைப்பில் இருந்தப்படியே தலை நிமிர்த்தி சொல்ல,
"என்ன?" என்று அவன் அதிர்ச்சியாக கேட்டான்.
ஆம் அவள் சாத்விக்கை பார்த்துவிட்டு ஆட்டோவில் வரும்போது, மதுரிமாவை அலைபேசி மூலம் அழைத்து, சாத்விக்கிடம் பேசியதை கூறியவள், விபாகரனை அவள் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று கூறினாள்.
அதைக்கேட்ட மதுரிமா, "உனக்கென்ன பைத்தியமா?" என்று தான் கேட்டாள். அப்போது புவனாவும் அருகில் இருந்தார்.
"பைத்தியம் இல்ல மது.. விபுக்கு நீதான் பொருத்தமானவ.. நீ அவரை நேசிச்ச, ஆனா நான் அவரை கல்யாணம் செஞ்சுக்கும் போது எனக்கு அவர் மேல அப்படி எதுவும் இல்ல.. அதனால நீதான் அவரை கல்யாணம் செய்துக்கணும்.." என்று யாதவி பேசியதை மதுரிமா ஸ்பீக்கரில் வைத்து புவனாவும் கேட்கும்படி செய்தாள்.
பின், "இங்கப்பாரு தேவி.. நான் சாத்விக்கை நீ கல்யாணம் செஞ்சுக்கணும்னு சொன்னது அப்போ தான் நான் விபாவை கல்யாணம் செய்துக்க முடியும்னு இல்ல.. ஒருவேளை நீ சாத்விக்கை தான் இப்போதும் மனசார விரும்புறேனா, கட்டாயத்துக்காக நீ விபாவோட