ஓவியம் தீட்டத் தெரியும் எனக் காண்பிக்கப் போகிறோம் தேவி”
“நல்லது இளவரசே. “ என்றுக் கூறி, அந்த மூட்டையை கிரண் தேவி எடுத்துக் கொள்ள, அதை விட சற்றுப் பெரிய மூட்டை ஒன்றினை ப்ரித்விராஜ் எடுத்துக் கொண்டான்.
இருவரும் சற்று தூரம் நடந்தே வந்தவர்கள், உதய்பூர் எல்லைத் தாண்டியவுடன், ஒரு வியாபாரியின் வண்டியில் ஏறி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இதுவரை நடந்தை ஒன்று விடாமல் சொல்லியவள், தற்போது ப்ரித்வி முகத்தைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.
“சரி, இதில் என்ன உன்னைப் பற்றித் தவறாக நினைக்க என்ன இருக்கிறது?”
“அது .. வந்து.. “
“சொல்லு”
அவர்கள் வண்டியில் ஏறிய சமயத்தில், எங்கிருந்தோ பறவைகளின் சத்தம் கேட்கவும், கிருத்திகா சட்டென்று விழித்தாள். விழித்தவுடன் தான்
“அச்சோ. அந்த இளவரசர் பார்க்க எப்படி இருக்கிறார் என்று நம் பாஸ் கேட்டாரே. சரியாகப் பார்க்கவில்லையே “ என்று மனதில் எண்ணியபடி கனவிற்கு ரீவைண்ட் மோட் கொடுக்க, யானையின் மேல் அமர்ந்து இருந்த இளவரசர் தெரிந்தார். சற்றே ஜூம் செய்து முகத்தைப் பார்க்கவும், அது கிருத்திகாவின் டூர் ஆர்கனைசர் ப்ரித்விராஜ் முகமாகத் தெரியவும், இப்போது சட்டென்று கண்ணைத் திறந்து விட்டாள்.
இதைச் சொல்லி முடிக்கவும், ப்ரித்வி “ஹ.. ஹ.. “ என்று சிரித்தான்.
“ஏன் பாஸ் சிரிக்கறீங்க?”
“இதற்குத் தான் இவ்ளோ பில்ட் அப் கொடுத்தாயா?”
“நீங்க வேறே பாஸ். கனவில் உங்க முகம் தெரியுதேன்னு டென்ஷன் ஆகிட்டேன்.”
“இதில் என்ன இருக்கு கிருத்தி?”
“அதில்லை. கனவில் அவர்கள் இருவரும் விரும்புவதாக எல்லாம் வருகிறதே. நீங்க என்ன நினைப்பீங்களோன்னு யோசிச்சேன்?”
“ஈசி கிருத்தி. நேற்று நீ கனவைப் பற்றிச் சொல்லும்போதே நான் கெஸ் பண்ணிட்டேன். எனக்கும் உன் கனவு ப்ராஜெக்ட்லே ஒரு ரோல் இருக்குன்னு. சோ இதில் தவறா நினைக்க எல்லாம் ஒன்றுமில்லை. அந்தக் கனவு நமக்கு ஏதோ இன்சிஸ்ட் பண்ணுது. அது என்னன்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுக்கணும். அவ்ளோதான்.”
“ஹ்ம்ம். அப்போ என்னைப் பற்றித் தவறா நினைக்கலை இல்லையா?”
“இல்லைமா. இப்போ உன்னோட கனவு அதோட ஸ்டாப் ஆகிடுச்சா? இல்லை சிறு
இடைவெளிக்குப் பிறகு மீண்டும்ன்னு வந்துச்சா?”
“இல்ல பாஸ். இன்றைய எபிசொட் இனிதே நிறைவு அடைந்து விட்டது. வணக்கம்” என்றுக் கூறிச் சிரிக்கவும், ப்ரித்வியும் சிரித்தான்.
தொடரும்!