கொண்டாள்.
“எந்தா ரினி இது ஆரானு?”
“என்ட பேர் ஜீவிகா ரினிஷாவினிட ப்ரெண்ட் ஆனு..சேட்டனுக்கு ஈ குட்டியை அறியுமோ?”,என்று தன் மலையாளத் திறமையை காண்பிக்க அவளும் பதிலுக்கு கேட்டு வைக்க அவசரமாய் அவளை தன்புறம் லேசாய் சாய்த்தவள்,
“ஜீ அது என் அண்ணன்.”
“என்டே குருவாயூரப்பா!!!”
“ஜீ!!”
“ஏன்டீ உனக்கு அண்ணனா உன்னை விட ஒரு நாலு அடி அதிகமா இருப்பான்னு நினைச்சேன்..இவரென்ன பனை மரத்துல பாதி உயரத்துக்கு வந்து நிக்குறாரு..அய்யோ ரேஷ் பாவம்..”
“”ஜீ காமெடி பண்ண நேரம் இல்ல ரேஷ் இருக்குறது தெரிஞ்சுது கண்டிப்பா எதாவது சொல்லுவான் உன் வாயை வச்சுட்டு பேசாம இரு நான் பேசி அனுப்பிட்றேன்..”
“ச்சா..நீ எங்க இங்க சென்னை வந்ததா சொல்லவே இல்ல....நான் இவங்களை பாக்குறதுக்கு வந்தேன்..இதோ பாரு பேபி பிறந்துருக்கு..”
“ஓ!!நான் காலையிலே தான் வந்தேன்..பிஸினஸ் விஷயமா அவசரமா ஒருத்தரை மீட் பண்ண வேண்டி வந்தேன்..ஆனா நான் இவங்களை பார்த்ததேயில்லையே..”
“ம்ம் நானே எப்போவாவது தான் பார்த்துப்பேன்..சரி நீ கிளம்பு நான் கொஞ்ச நேரத்துல கிளம்பிருவேன்.”,என்றவள் அவனை கிளப்ப நினைத்து அவரப்படுத்த அவனும் தலையசைப்போடே கிளம்பத் தயாரான நேரம் இவர்கள் இருவரையும் தேடி ரேஷ்வா வந்திருந்தினான்.
“செத்தான் டா சிவணாண்டி..ரினி செல்லம் யார் முகத்துல இன்னைக்கு முழிச்ச அமோகமா இருக்கு போ..”,என்றது காதில் விழுந்தவனாய் ரினிஷாவின் அண்ணன் அவளைப் பார்த்து முறைத்து நிற்க ரேஷ்வாவே ஒரு நொடி என்ன செய்வதென புரியாமல் திகைத்தான்.
“நோ நோ டென்ஷன் சேட்டா..வேணா நீங்களும் எங்களோட. சேர்ந்து லஞ்ச் சாப்டுங்களேன்.”,என்றவளை ரினிஷா காளியாய் முறைத்திருக்க குழந்தையை பார்த்தவாறே அவளை விட்டு நகர்ந்து நின்றவள் மீண்டுமாய் அவனை அழைத்தாள்.
ஜீவிகா அவனோடு முன்னே நடக்க ரேஷ்வாவும் ரினிஷாவும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்.
“ரேஷ் எனக்கு பயமா இருக்கு..”