வைக்குற நம்பிக்கையின் அடிப்படையில அந்த நபரை ரினிஷா கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கும் போது அவ பேசி பழகின ஒருத்தர் மேல ஏற்பட்ட நம்பிக்கை அடிப்படையில அவ ஏன் ரேஷ்ஷை கல்யாணம் பண்ணிக்க கூடாது..”
“அதெல்லாம் தெரியாது..எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.இனியும் என் முடிவு மாறாது..”
'டேய் அண்ணா நானும் பொறுமையா பேசிகிட்டே இருக்கேன்..சும்மா சந்தைக்கு போனும் ஆத்தா வையும்னு சொன்னதையே சொல்லிட்டு இருக்கீங்க..இல்லை தெரியாம தான் கேக்குறேன் உங்களுக்கு எதுக்கு இஷ்டம் இருக்கணும்..கல்யாணம் பண்ணிக்க போறவ அவ..அவளுக்கு பிடிச்சா போதாதா..
ஏதோ இந்த பொண்ணா இருக்கப் போய் இவ்ளோ தூரம் அமைதியா இருக்கா..நான் மட்டும் உன் கூட பொறந்த தங்கச்சியா இருந்தேன் நீ பேசுற பேச்சுக்கு கட்டையை எடுத்து மண்டையை உடைச்சுருப்பேன்..
இப்போ என்ன.. உன் தங்கச்சி நீ கல்யாணம் பண்ணி வச்சா வை இல்ல அடுப்படில போட்டு பூட்டு..சும்மா கடுப்ப கிளப்பிகிட்டு..ஏய் இந்தாம்மா ஹீரோயினு உனக்கெல்லாம் இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது..என் ப்ரெண்டுக்கு உன்னைவிட நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுக்குறோம் நீயும் உன் நொண்ணணும் போய் சென்டிமெண்ட் சீன் ஓட்டுங்க..
இந்த ஆளை கூட்டிட்டு கிளம்பு போ..அவ அவ கொலைப்பசில உக்காந்து பேசிட்டு இருக்கா..ஒண்ணும் புரியாம வந்து உயிரை வாங்கிகிட்டு..கிளம்பு டீ இனி ஜீ ஈனு சொல்லிட்டு வந்த உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது கிளம்பு போ..”,என எறிந்து விழுந்தவள் அவள் முன் இருந்த உணவை உண்ண ஆரம்பித்திருந்தாள்.
ரினிஷாவின் அண்ணன் அவள் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அனைவரையும் திரும்பி திரும்பி பார்த்தவாறு ரினிஷா அங்கிருந்து சென்றாள்.ஒரு நிமிடம் முழுவதுமாய் அங்கு அமைதியே நிலவ ரேஷ்வாவோ மொத்தமாய் அதிர்ந்து அமர்ந்திருந்தான்.
“ஜீ!!”
“ஆத்வி இன்னும் இரண்டு நிமிஷம் கழிச்சு என்ன கேட்கனுமோ கேளு”,என்றவள் உணவிலே கவனமாய் இருக்க சரியாய் அவள் கூறிய இரண்டு நிமிடத்தில் ரினிஷா அங்கு ஓடி வந்தாள்.
“ஜீ செல்லக்குட்டி பின்ற போ..என்னா நடிப்பு…நானே அரண்டு போய்ட்டேன்..லவ் யூ டீ செல்லம்..நீ போட்ட பிட்டை அப்படியே கன்டினியூ பண்றேன்..கண்டிப்பா வழிக்கு வந்துடுவார்..பை கைஸ்..சாரி ரேஷ்..அப்பறமா பேசுறேன்.”,என்றவள் அங்கிருந்த தனது தோள்பையை எடுத்துக்