தாயான உன்னைத் தாங்கிக் கொள்ள எழுபிறப்பும் காத்திருப்போம்”
ஷான்யா கூறி முடித்த நொடி இருக்கும் இடம் கூட மறந்து அழுது விட்டிருந்தாள் ஜீவிகா..ஐவருமாய் அவளைத் தாங்கிக் கொள்ள சமாதானப் படுத்துவதற்குள் ஒருவழியாகி விட்டிருந்தனர்.
தங்கள் ஜீயை இத்தனை உணர்ச்சி ததும்பியவளாய் இதுவரை யாருமே கண்டிராததால் அனைவருக்குமே கண்கள் பனித்து தான் போனது.ஒரு வழியாய் தன்னைத் தேற்றியவளாய் முகத்தைத் துடைத்தவள் ஷான்யா அருகில் சென்று அவள் கன்னத்தில் அழுந்த இதழ்பதித்து விடுவித்து,
“நானும் ரௌடி தான்னு வச்சுருந்த என் இமேஜை இப்படி டேமேஜ் பண்ணிட்டல..இதுக்கு தண்டனையா நீ என்ன பண்ணுவியோ தெரியாது எனக்கு சம்மநந்தி ஆகியே ஆகணும் சொல்லிட்டேன்.இந்தாம்மா ஹீரோயினி நீயும் தான்..சொல்லிட்டேன்..என்ன மாம்ஸ் தீயா வேலை பாக்குறோம்..இரண்டு புள்ளையை பெத்து டஃப் காம்படீஷன் கொடுக்குறோம் டீலா?”
“கருமம் கருமம் என் மானம் போகுது முதல்ல உன்னை இங்கிருந்து நகர்த்தனும்”,என்றவன் அவளை தள்ளாத குறையாய் அழைத்துச் செல்ல மற்ற இரு ஜோடிகளும் மனம் நிறைந்து சிரித்தவாறே அவர்களைப் பார்த்திருந்தனர்.
***********முற்றும்***********