அங்கு காரில் அமர்ந்த ரினிஷாவோ ஒன்றுமே கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.அவ்வப்போது அவளைப் பார்த்தவாறே சாலையில் கவனம் செலுத்தியவனுக்கு தங்கையின் பாராமுகம் ஒருவித பாரத்தை கொடுத்தது.
நேராய் கடற்கரைக்குச் சென்று காரை நிறுத்தியவன் அவளைப் பார்க்க,
“அண்ணா நான் என்ன தப்பு பண்ணிணேன்.லவ் பண்றது அவ்ளோ பெரிய குத்தமா..அதுமட்டுமில்லாம உங்க எல்லார் சம்மதத்தோடேயும் கல்யாணம் பண்ணணும்னு தான நினைச்சேன்.ஜி என்ன வார்த்தை பேசிட்டா பாருங்க..
உனக்கே தெரியும் தான எனக்கு ப்ரெண்ட்ஸே அவ்வளவா கிடையது இப்போ கொஞ்ச நாளா தான் இவங்க கூட எல்லாம் பழகி சந்தோஷமா இருந்தேன்.முகத்துலேயே முழிக்காதனு சொல்லிட்டா ணா..
என்னைவிட நல்ல பொண்ணா பார்த்து ரேஷ்க்கு கல்யாணம் பண்றேன்னு சொல்றா..அப்போ நான் நல்ல பொண்ணு இல்லையா..எனக்கு ரேஷ்ஷை கல்யாணம் பண்ற தகுதி இல்லையா ணா..”
“ஏடி..ஏன் இப்படியெல்லாம் பேசுற..பார்த்தியா இந்த லவ் இந்த ரேஷ்வா உன்னை எவ்ளோ பலகீனமா ஆக்கிட்டான்னு பார்த்தியா..நீ எதுக்குமே இப்படி மனசு ஒடிஞ்சு போறவளே கிடையாதே உன்னையே எப்படி ஆக்கிட்டான் பாரு..இதெல்லாம் உனக்கு தேவையா?”
“அண்ணா ப்ளீஸ்..ஏற்கனவே நொந்து போய்ருக்கேன்..நீ இன்னும் கஷ்டப்படுத்தாத..உனக்கு என்ன நான் அவரை கல்யாணம் பண்ணிக்க கூடாது அவ்ளோதான..இனி நீயே நினைச்சாலும் ரேஷ் என்னை ஏத்துக்க மாட்டார்.ஜீ அவருக்கு புரிய வச்சுருவா..
நல்ல ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவர் சீக்கிரமே எல்லாத்தையும் மறந்துருவாரு..ஆனா நான்..இல்ல நானும் சீக்கிரமே சரி ஆய்டுவேனு நம்புறேன்.நீ சந்தோஷமா ஊருக்கு கிளம்பு ணா..ஐ வில் மேனேஜ்..என்னை வீட்ல விட்டுரு ப்ளீஸ்..”
“ரினி..”
“அண்ணா ப்ளீஸ் லீவ் மீ அலோன்..”,என்றவள் விழி மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.அவனும் அதற்குமேல் பேச வழியின்றி அமைதியாய் காரை உயிர்பித்து அங்கிருந்து கிளம்பினான்.
என்ன தான் தங்கையிடம் பதிலுக்கு பதில் வாதாடினாலும் மனதளவில் அவளது சோகமான முகம் அவனை கலங்க வைத்திருந்தது.இரவு பயணத்தை ரத்து செய்தவன் அங்கேயே ஹோட்டலில் தனக்கான அறையில் முடங்கிக் கிடந்தான்.