தூங்குறேன்..”
“ஜீ எவ்ளோ பெரிய விஷயத்தை செஞ்சுட்டு இப்படி தூங்கபோறேன்னு சொல்றியே..”
“ஏய் மூஞ்சி மேல புகழாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..போ போ போய் புள்ளைகுட்டிக்கு பேர் செலெக்ட் பண்ணு..தயவுசெஞ்சு தூங்க விடுங்க டீ..இல்லை முழுசா சந்திரமுகியா மாறப் போற ஜீவியை பர்த்துருவீங்க சொல்லிட்டேன்..குட் நைட்..”,என்றவள் அணைப்பைத் துண்டிக்க ரேஷ்வாவிடம் பேச ஆரம்பித்தாள்.
“பேபி..”
“ஐ அம் சோ சோ சோ ஹாப்பி ரேஷ்..அவன் என்ன டேட் சொன்னாலும் ஒகே சொல்லிருங்க..ஐ வாண்ட் டு பி வித் யூ பார் எவர்..”
“எனக்கு நாளைக்கே கல்யாணம்னு சொன்னாலும் ஓகேதான் ரினி டியர்..ஐ அம் இன் ஷாக் ஸ்டில்..”
“எனக்குமே கனவு மாதிரி தான் இருக்கு.எதிர்பார்க்காத நேரத்தில எதிர்பார்க்காத எல்லாமே நடக்குறது ஒரு மாதிரி ஜாலியா தான் இருக்கு.நேத்து ஜி பேசின அப்போ கூட எனக்கு அவ்ளோ நம்பிக்கை எல்லாம் இல்ல.ஆனா இப்போ.ஓ மை காட் ஓ மை காட்…”
“ஹா ஹா சின்ன குழந்தை மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்க பேபி..”
“பின்ன இல்லையா எவ்ளோ பெரிய விஷயம்..மிஸர்ஸ்.ரேஷ்வா ஆக போறேன்.ஐ அம் டோட்லி மேட் நவ்..”
“லவ் யூ மை டியர்..”
“லவ் யூ சோ மச் ரேஷ்..”,என்றவள் மறுமுனையிலிருந்து அழுத்தமாய் இதழ் பதித்திருந்தாள்.
அனைத்தும் நல்ல படியாய் முடிந்து இருபது நாட்களில் வரும் முகூர்த்தத்தில் கல்யாணம் என்று முடிவானது.ரேஷ்வாவின் முறைப்படியும் ரினிஷாவின் முறைப்படியுமாய் இரு திருமண சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே ஜீவிகா பட்டாளமே ரேஷ்வா வீட்டிலும் ரினிஷா வீட்லுமாய் தான் கொட்டம் அடித்துக் கொண்டிருந்தனர்.அதிலும் மெஹந்தி பங்ஷனிற்காக ஜீவிகா முதல்முறையாய் ரினிஷாவின் வீட்டிற்கு சென்ற நேரம் முதலில் கண்ணில் பட்டதே ரினிஷாவின் அண்ணன் தான்.
“ஹாய் சேட்டா..யூ ஆர் வெரி குட் பாய்..உடனே ஓகே சொல்லிட்டீங்களே”,என்றவளை முறைத்தவாறே அவன் நகர முற்பட அவனை பிடித்து நிறுத்தியவள்,
“சேட்டா சேட்டா..நாம ப்ரெண்ட்ஸ் ஓ.கே இப்படியெல்லாம் முறைக்க கூடாது..சும்மா அன்னைக்கு வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டேன்.அவங்க கல்யாணத்துக்கு எதிரா நியாமான