சாய்தந்தான் வேத்.
தம்பி என்னாச்சு?? என முருகேசன் கேட்க ஒன்னுமில என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க என கூறினான் வேத்.தலை முடியை பிடித்து கொண்டு பித்து பிடித்தது போல உட்கார்ந்து கொண்டிருந்தான் வேத் காதலுக்கும் பாசத்திருக்கும் நடுவே மாட்டிக்கொண்டு எந்த திசையில் செல்வது என்று தடுமாறி கொண்டிருந்தான் வேத் ஆபத்தில் இருக்கும் தன் தந்தையை காப்பாற்றுவது தான் முதல் வேலை என்றும் சாரவை இன்று அடையாமல் போனாலும் நாளை எப்படியாவுது அடைந்து விடலாம் என்ற எண்ணம் வேதின் மனதில் தோன்றி கொண்டிருக்க மிஸ்டர் வேத் உங்க அப்பா கண் முழிச்சி டாரு டிஸ்டர்ப் பண்ணாம அவர போய் பாருங்க என நர்ஸ் கூற உள்ளே சென்றான் வேத். வேலுவிடம் அருகில் சென்ற வேத் அவரின் கையை பிடித்தான் தம்பி வேத் அப்பா இல்லனாலும் நீ எப்பயும் சந்தோசமா ஜாக்கிரதையா இருக்கணும் பா யாரையும் நம்பாத தம்பி புரிதா நான் செஞ்ச தப்ப நீயும் செய்யாத பா என வேலு கண்ணீர் விட அப்பா எதுக்கு பா இப்டிலாம் பேசுரிங்க நான் உங்கள போக விட்டுறவனா நான் இருக்கும் மோது நீங்க இப்படி பேசலாமா நான் சொல்றத கேளுங்கப்பா அந்த எம். பி பொண்ண நான் கல்யாணம் பண்ணிகுறேன் நீங்க எம். பி கிட்ட பேசுங்க இல்ல நானே பேசுறேன் இந்த பிரச்சினைய சால்வ் பண்ணிடுறேன் என வேத் கூற தம்பி இப்படி எடுத்தோம் கவுத்தோம்ன்னு முடிவு எடுக்காதப்பா எனக்காக நீ இவ்வளவு கஷ்டம்லாம் பட வேணாம்ப் பா நேரம்ன்னு வந்துட்டா எல்லாரும் போய் தான் ஆகணும் என வேலு கூற அப்பா நான் ஒன்னும் சின்ன குழந்த இல்ல நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன் பிலீஸ் இதுக்கு மேல எதுவும் பேசந்தீங்க நீங்க ரெஸ்ட் எடுங்க நான் பாத்துக்குறேன் மத்ததேல்லாம் என கூறி விட்டு வெளியே வந்த வேத் முருகேஸ் அண்ணே நான் சொல்றத கேளுங்க நீங்க எம் பிக்கு போன் பண்ணி அப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாருன்னு சொல்லி நம்ம கேஸ் விஷயத்தையும் பேசி எல்லாத்தையும் சால்வ் பண்ணிடுங்க ஒரு முக்கியமான விஷயம் கல்யாணத்த எவ்வளவு சீக்கிரம் வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வைக்க சொல்லுங்க என பட பட வென சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான் வேத்.
இதான் நடந்துச்சு அப்ப நான் இருந்த சிச்சு வேஷன்ல எடுத்த முடிவு தான் இது சாரா சென்னைல இல்லாத நேரம் தான் இதெல்லாம் நடந்துச்சு அதனால தான் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்குடேன் மத்த படி உன் மேல எனக்கு எந்த ஒரு வெறுப்பும் இல்ல விருப்பமும் இல்ல என்ன மன்னிச்சிடு இனியா இத நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிற்கணும் இவளோ நாள் நான் என்ன பன்றேனு எனக்கே தெரியமா பண்ணிட்டு