(Reading time: 15 - 29 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

இருக்கிறது. தங்கள் குல தெய்வமான கரணி மாதா உங்களோடு நிச்சயம் துணை இருப்பாள். ஆனால் நம் திருமணம் முடியவில்ல என்று மட்டும் சொல்லாதீர்கள். என்னைப் பொறுத்தவரை நம் மனம் ஒன்றுபட்டதோ அன்றே மணமும் முடிந்து விட்டது. அதை அறிவிக்கும் நாள் மட்டுமே தள்ளிப் போயிருக்கிறது. எனவே நான் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பேன் என்று மறவாதீர்கள்” என்றுக் கூறினாள் கிரண் தேவி.

இளவரசனின் மனம் மகிழ்ச்சியையும், துக்கத்தையும் ஒரே நேரத்தில் உணர்ந்தது. கிரண் தேவியின் அன்பு அவனை மகிழ்விக்க, இதை அனுபவிக்கும் பாக்கியம் தனக்குக் கிடைக்குமா என்ற எண்ணம் வருத்தத்தைக் கொடுத்தது.

“சரி தேவி. உன் ஆசைப்படியே வெற்றியோடு திரும்பி வர பவானித் தாய் அருள் புரியட்டும். நீ பிகானர் புறப்படத் தயாராகு” என்றான்.

“இளவரசே. இந்த ராஜபுத்திரர்களின் நம்பிக்கை வெளிச்சம் நம் ராணா மட்டும் தான். அவருக்கு எந்தத் திக்கில் இருந்து ஆபத்து வரும் எனத் தெரியாது. அவரை அரண் போல் காத்து போரில் வெற்றி அடையுங்கள். இது என் வேண்டுகோள் இளவரசே” என்றாள்.

“அது என் கடமை தேவி. என்னுயிரை கொடுத்தாவது மகாரானாவின் உயிரை நிச்சயம் காப்பேன் தேவி. கவலை வேண்டாம்” என்று கூறினான்.

ப்ரித்விராஜின் வார்த்தைகளுக்கு வானத்தில் இருந்து தேவர்கள் ததாஸ்து சொனார்களோ என்னவோ அப்படி ஒரு நிலையை ப்ரித்விராஜ் சந்திக்கத்தான் வேண்டி இருந்தது.

தொடரும்!

Episode # 43

Episode # 45

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.