அவன் என்னுடைய மிரட்டலை மறந்து மீண்டும் என் வழியில் குறுக்கிட்டு விட்டான். அவனை நானே அழித்து முற்றுபுள்ளி வைக்கிறேன். இப்பவே வரேன். நீ வெயிட் பண்ணு" என்று தொடர்பை துண்டித்தான்.
இன்னும் கொஞ்சம் கிரிமினலாக யோசித்தான்… இப்படியே திடுக்கென்று போய் படக்குனு அதிரதனை அழிக்க கூடாது. அவனை இந்த நொடியில் இருந்து பதற வைக்கணும்….
அலைபேசியை எடுத்து அதிரதனுக்கு அழைப்பு விடுத்தான். மறுமுனையில் தொடர்பு கிடைக்கவும்...
"யெஸ் அதிரதன் ஸ்பீக்கிங். நீங்க யார்"
"ஹா… நீ உயிரோட இருக்க நான்தான் காரணம்"
"அது என்னோட அப்பான்னுல நினைச்சேன்."
"அப்பாவா… நான் உனக்கு கடவுள் மாதிரி… ஜெனிட்டாவை அழித்த கையோடு உன்னையும் அழிக்காமல் உயிரோடு விட்டேன் பாரு…"
ஜெனிட்டாவின் பெயரை சொல்லவும் உடனே சுதாரித்த அதிரதன் சட்டென்று புரிந்து கொண்டான். இவன் அந்த மெடிக்கல் மாபியா தான். அவன் ஏற்கனவே இப்படிதான் அவனுக்கு வார்னிங் தந்தான். அதையும் மீறி அவன் செய்த பொழுதுதான் ஜெனிட்டாவை அழித்தனர். அதற்கு சரியான ஆதாரம் எதுவும் கிடைக்காததால் அவர்களை பிடிக்க முடியவில்லை. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விட்டான். இப்பொழுது வசமாக சிக்கிக் கொண்டான். சட்டென்று எழுந்த கோபத்துடன் அவன் பேசினான்
"உன்னால நான் ஒன்னும் உயிரோட இல்லை. என்னாலதான் நீ உயிரோட இருக்கிறாய். அன்னைக்கே நீ என் கையில் சிக்கியிருந்தால் உன்னுடைய முடிவை நானே எழுதி இருப்பேன். இப்ப என்ன தைரியத்துல திரும்பவும் என்கிட்ட நீ வந்து பேசுகிறாய்?. ஒரு விஞ்ஞானி என்றால் எல்லாவற்றிற்கும் பயப்படுவான்... அமைதியாக இருப்பான்… எவன் என்ன செய்தாலும் அமைதியாக ஏற்றுக் கொள்வான் என்று நினைத்தாயா?" என்று கோபமாக கேட்டான்.
"அப்படியெல்லாம் நான் சொல்லமாட்டேன் ஏனென்றால் நானும் ஒரு சயின்டிஸ்ட்தான். ஒரு காலத்தில் அப்படி இருந்து இப்பொழுதுதான் வியாபாரியாக இருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் உறுதியாகச்