சொல்வேன். நான் உன்னை விட பெரிய கிரிமினல். எனக்கு அழிக்கவும் தெரியும் ஆக்கவும் தெரியும்" என்றவன் தொடர்ந்து,
"இப்பவும் நான் எதுக்கு உனக்கு கால் பண்ணேன் என்கிற விஷயத்தை சொல்றேன். நான் இப்போ உன்னை தேடி வருவேன். அந்த நாட்டு மருந்து கிழவனோடு நீ எங்க இருக்கேனு எனக்கு தெரிஞ்சு போச்சு. உன்னையும் அந்த கிழவனையும் அழித்து… நீ செஞ்ச ஆராய்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தான் போறேன். அந்த பொண்ணு கூட க்யூராயிடுச்சு போல… கண்ணு முன்னாடி பளபளன்னு சுத்திட்டு இருக்கிறாளே… விடமாட்டேன்… "
"வா… வா! நான் உனக்காக காத்துகிட்டு இருக்கேன். ஜெனிட்டாவிற்காக உனக்கு ஒரு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்று அதிரதன் சொன்னான்.
" நீ ரொம்பவும் காத்திருக்கத்தான் வேண்டும். எனக்காக இல்ல உன்னுடைய மரணத்திற்காக... உனக்கு கொஞ்சம் கொஞ்சமாக மரண பயத்தை காட்டி அப்புறம் உன்னை கொல்வேன். என்னை இத்தனை நாள் கழித்து திரும்பவும் அவமானப்படுத்தி இருக்கிறாய் அல்லவா.. என்னுடைய க்ளைன்ட்ஸே என்னை கேள்வி கேட்கும் அளவிற்கு கொண்டுவந்து நிறுத்திட்ட… உன்னை நான் விடமாட்டேன். இப்பவே நான் உன்னை பார்க்கதான் வந்திட்டு இருக்கேன். தைரியம் இருந்தா அந்த இடத்திலேயே எனக்காக காத்திரு"
" நீ வா நான் காத்திருக்கேன்" என்று சொல்லி விட்டு போனை வைத்த அதிரதனுக்கு திடீர் என்று சந்தேகம் வந்தது.
'அவன் என்ன சொன்னான்..?. என்னையும் வைத்தியரையும் என்று சேர்த்து சொன்னானே.. அவர் வேற இடத்தில் இருக்கிறார்.. அவன் இங்கே வருவானா அல்லது அங்கே போவானா?.. ' அவன் யோசிக்கும் போதே… இன்னொரு விசயமும் நினைவிற்கு வந்தது. அவன் இதுவரை நடந்த ஆராய்ச்சியையும் அழிப்பதாக சொன்னானே… கண்ணு முன்னாடி… அப்படி என்றால் அவன் க்ருபா அங்கிள் வீட்டுக்கு போவானோ…! ஒருவேளை அங்கேயே இருக்கானோ…
நோ.. நாட் லைக் தட்… அப்படினால் போன் பேசி சவால் விடமாட்டான்… மே பீ ஆன் தி வே…?
மை காட்… அவன் இப்ப அங்கே போயிடுவானா?. முதல்ல அபியை