காப்பாத்தணும்"
அவன் சொன்ன வார்த்தையில் சுதாரித்த அதிரதன் அபியை பரிசோதிக்க ஆரம்பித்தான்.
"ஆவ்… அத்தான் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. மயங்கியது போல நடித்தேன் "
"என்னது… அந்த விஷம் உன்னை ஒன்றும் செம்யவில்லையா?" வினய் அதிர்ச்சியாக கேட்டான்.
"அது விஷமா மருந்தானு தெரியலை. முன்பைவிட இப்போ கொஞ்சம் நல்லா மூச்சுவிட முடியுது."
"எப்படி…"
"விஷம் விஷத்தை முறித்து விட்டது வினய். அபியின் இரத்தத்தில் இருந்த டாக்ஸினை இது முறித்து விட்டது. அதுதான் இந்த ரியாக்ஸன்."
"உன்னோட ஹார்ட்டுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. மை காட்… நீ சீக்கிரம் குணமாயிடுவ அபி" என்று வினய் கை குலுக்கினான்.
"என்ன விஷயம்" என்று கேட்ட அதிதியிடம் அதிரதன் விளக்கம் சொன்னான்.
"அபிக்கா… இதெல்லாம் கடவுள் செயல்தான்… நீ அவனை கொன்னுடுவேன்னு பயந்துட்டேன்"
"ஆனால் நீதான் துப்பாக்கியை பிடித்திருந்தாய். எப்படி குறி பார்த்து சுட்டாய்"
"ப்ச்… நான் அந்த தடியனுக்கு குறி வச்சேன். அது இவன் மேல பாய்ந்துடுச்சு"
"என் மேல மட்டும் குறி பார்த்து எல்லாத்தையும் வீசு" அதிரதன் சலித்து கொண்டான்.
"அவனை இப்போதும் உயிரோடு விட்டு விட்டோம்னு கவலையாக இருக்கு." க்ருபா சொன்னார்.
"அதிதி சொன்ன மாதிரி கடவுள் பார்த்துப்பார்"
"ம்… அவனை யார்ணு தெரியாமல புடிச்சிட்டு போயிட்டாங்க. ரிமாண்ட் பணறதுக்குள் நிறைய போன் கால் வரும். அப்புறம் அவனை தவிர மத்தவங்க மேல கேஸ் ஃபைல் ஆகும்" வினய் அலுத்துக் கொண்டான்.
"அப்படி நடக்க விட மாட்டேன். " அதிரதன் சொல்ல,
"சரி.. சரி இப்போது கொஞ்சம் ஓய்வெடுப்போம். க்ருபா வாப்பா உன்னோட