பேசி நாளாகுது" என்று நகர்ந்த கங்காதரன் திரும்பி…
"நாளைக்கு உங்க டைவர்ஸ் கேஸ் வாய்தா… போய் அட்டென்ட பண்ணுங்க"
"என்ன சொல்லணும்" அதிரதன் கேட்டான்.
"அதை நான் சொல்றேன் சார்… வாங்க" என்று அதிதி அவளுடைய அறைக்கு அவனை இழுத்து சென்றாள். "ஆமா… ஜெனிட்டாங்கறது உங்களுக்கு யார்?" அவளுடைய குரல் தேய்ந்து ஒலித்தது.
"நம்பிக்கைக்குரிய உதவியாளர். உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று நம்பியவள்" அதிரதன் விளக்கிக் கொண்டே சென்றான்.
இப்போது ஹாலில் அபியும் வினயும் மட்டுமே இருந்தனர்.
"தேங்க்ஸ்…" வினய் சொன்னான்.
"எதுக்கு?"
"நீ அந்த ஜேக்கை கொல்லாமல் விட்டதற்கு…"
"உனக்காக விட்டுட்டேன்னு நினைச்சியா…? ஒரு உண்மைய சொல்லவா… அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல செத்து போயிடுவான்..அந்த வைரஸ் மட்டும் ஆட்கொல்லியாக இருந்தால்.."
"வாட்…"
"ஆமாம்… அதிதி அவனோட காலில் சுட்டப்போ அவன் கையில் வச்சிருந்த வைரஸ் கேப்ஸ்யூல் மேல் நோக்கி பறந்து அப்பியே திரும்பி கீழே கிடந்த அவனோட வாய்க்குள் லேண்ட் ஆயிடுச்சு. அதை அவன் உணரக்கூட இல்லை. இந்நேரம் அந்த வைரஸ் அவனோட உடம்புக்குள்ள போயிருக்கும்"
"ஆர் யூ ஷ்யூர்?"
"கடவுள் கடவுள்னு அதிதி சொல்றாள்ல அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்கேன். அவர் என்ன செய்றாருன்னு பார்க்கலாம்"
அவருடைய தீர்ப்பு இரண்டு மணி நேரத்திலேயே கிடைத்தது. அந்த இன்ஸ்பெக்டர் பேசினார்.
ஜீப்பில் போகும்போதே அந்த ஜேக்கின் உடல் நீலம் பாய்நது துடிதுடித்து கண் மூக்கு காதில் இரத்தம் வடிய இறந்து விட்டானாம். அவசரமாக போஸ்ட்மார்ட்டம் செய்ததில் அவனை புதுவிதமான வைரஸ் தாக்கி இருக்கிறதாம்… அது இயற்கையானதா… செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம்.