வெளியே வந்து கட்டுகளை அவிழ்த்து தன் உடையை மாற்றிக்கொண்டாள். அவளுக்கு இருந்த ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் இப்போது அவளால் நிற்க முடிகிறது. ஆனால் வலுவாக நிற்க முடியவில்லை. பழையபடி கைகளில் பலம் குறையவில்லை என்பது புரிந்தது. ஆனால் கால்களில் இன்னும் பலம் கூடவில்லை
அதற்காக பலம் இழந்த கால்களை உறுதியாக வைப்பதற்காக மர சட்டங்களை கால்களில் இணைத்து இறுக்கமாக எலும்பு முறிவு வைத்தியம் செய்வது போல கட்டிக் கொண்டாள். இப்பொழுது ஓரளவுக்கு அவளால் நிற்க முடிந்தது. அவளுக்கு கால்களில் வலி இல்லை. அந்த ஒரு வார வைத்தியத்தில் கொஞ்சம் அவளுக்கு கால்களில் உணர்வு வந்திருந்தது. எனவே நிலைமையைச் சமாளிக்கலாம் என்று நம்பினாள். மெதுவாக கதவை நோக்கி நகர்ந்தாள்.
அதற்குள் அந்தப் பக்கத்தில் ஒரு பிரளயமே நடந்து விட்டது. சமையலறையிலிருந்து வெளியே வந்த அதிதியை பார்த்து வினய் "அதிதி இங்கிருந்து ஓடிவிடு" என்று கத்த, அதே சமயத்தில் இன்னொரு அடியாள் அதிதியை நோக்கி பாய்ந்து ஓடினான். அவளை வேகமாக இழுத்து கீழே தள்ளினான். அந்த போராட்டத்தில் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்துவிட்டாள்.
அதை பார்க்கவும் க்ருபா "அவளை விட்டுவிடு' என்று கத்தினார்.
" அவள் உன்னுடைய பெண்தானே போனால் போகட்டும் விட்டு விட்டு போகலாம் என்று பார்த்தேன். அதனால் நீ இவ்வளவு துடிதுடிப்பதை பார்த்தால் எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. உன்னை அடிப்பதை விட அவளை அடிப்பது உனக்கு ரொம்ப வலிக்கும்போல" என்று வில்லத்தனமாக சிரித்தான். அப்போது வினயின் அலைபேசி ஒலித்தது.
"யார் அது?" என்று அவனுடைய அலைபேசியை ஜேக் எடுத்து ஆன் செய்தான். அந்த பக்கம் "வினய் நான் அதிரதன் பேசுகிறேன்" என்ற குரல் கேட்கவும் அவனுடைய முகமே மாறிவிட்டது.
"நான் பேசுவது கேட்கிறதா?. அவன் வந்து விட்டு சென்று விட்டானா… நான் அங்கே வந்து கொண்டே இருக்கிறேன்" என்றான்.
"என்ன ஒரு பித்தலாட்டம்!. நானே ஒரு பெரிய கேடி. நீ எனக்கு மேலே