(Reading time: 30 - 60 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

" இதோ அவரே வந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் பேசிவிட்டு செல்லலாம்" என்றவன்  " இவருக்கு குடிக்க ஏதாவது கொண்டுவா" என்று அதிதியிடம் சொன்னான்.

கிருபா தன் அறையை விட்டு வெளியே வந்து நடு கூடத்திற்கு வந்தபோது…  அங்கு நடுநாயகமாக நின்று கொண்டிருந்த அவனை அப்பொழுதுதான் கூர்ந்து கவனித்தார். அதே சமயத்தில் அவனும் கிருபாவை  பார்த்தான்.

"இவரைத்தான் வைத்தியர் என்று நினைத்தோம்" என்று அருகில் நின்ற அடியாள் கிசகிசுத்தான்.

"உங்களை மாதிரி முட்டாள்களை நான் வேலைக்கு வைத்திருந்தால் இது போலதான் தப்பும் தவறுமாக நடக்கும் " என்று அவனிடம் கடிந்தவாறு  கிருபாவின் பக்கம் திரும்பி,

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சரித்திரப் பேராசிரியர் என்று உங்கள் உதவியாளர் சொன்னார். உங்களுடைய ஆராய்ச்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் " என்று சொன்னான்.

"நீங்கள் யார்?" ன்று கிருபா கேட்க..

" நான் இந்த காட்டு வழியாக வந்தேன்  ஒரு வீடு இருக்கவும் பார்த்து விட்டு  இங்கே யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வந்தேன். நான் என் வழியே நடக்கிறேன். நன்றி" என்று சொல்லிவிட்டு அவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

'இவரை எங்கேயோ சந்தித்திருக்கிறேன்' என்று ஜேக் யோசித்து திரும்பிய அதேவேளையில் க்ருபாவும் ஜேக்கின் முகத்தைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

'இவன் அவன் தானோ?' என்று யோசனை அவர் முகத்தில் பரவியது. வயதான முகத்தின் சுருக்கங்களை எடுத்துவிட்டுப் பார்த்தால் இருவருக்கும் மற்றவர் யார் என்பது புரிந்துவிட்டது.

"நீ சர்மாவின் உதவியாளன்தானே" என்று கிருபா குரலை உயர்த்தி கத்தினார்.

"நீதானே அந்த கடைசி நாளில் என்னை அடித்துப் போட்டுவிட்டு அந்த பெண்ணை தூக்கி கொண்டு சென்றவன்  அன்றைக்கே உன்னை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.