பெரிய கிரிமினல்களாக இருக்கிறீர்கள். என்னிடமா நாடகமாடுகிறீர்கள். இப்பொழுது அவனும் இங்கே வந்து கொண்டிருக்கிறான். உங்கள் அத்தனை பேரையும் அழித்து விடுகிறேன். "
வினய் பக்கம் திரும்பி,
" உன்னையும் விடப் போவதில்லை. இந்த மிச்சம் வைக்கிற வேலையினால் நான் ரொம்பவும் பாதிக்கப்பட்டு விட்டேன். ஜெனிடாவை அழித்த கையோடு அதிரதனை அழித்திருந்தால் இன்னைக்கு எனக்கு சிக்கலில்லை. சர்மாவை அழித்தது போல அந்த இந்த ஆளையும் அன்றைக்கே அழித்திருக்கணும். இப்போது எல்லோரும் ஒண்ணு கூடிட்டாங்க. அந்த வைத்தியன் எங்கே இருக்கிறான்?" என்று வினயை அடிக்க ஆரம்பித்தான்.
அதே சமயத்தில் தலையில் அடிபட்டு மயங்கி கிடந்த அதிதியை ஒரு அடியாள் தூக்க சொல்லவும்… "எதற்கு அவளைத் தொடுகிறாய். அவள்தான் மயங்கி கிடக்கிறாள் அல்லவா.. ஒரு அடி தாங்க மாட்டாள்.. அப்படி ஓரமாக தள்ளி விடு" என்று அவளை பிடித்து உதைத்து தள்ளினான். மயக்கமாக இருந்தவள் உருண்டு போய் கிருபா அறை வாசலில விழுந்தாள்.
வினய்யை மற்றொருவரிடம் தள்ளிவிட்டு "இவனை கட்டிவை அதிரதன் வரும்வரை இவன் இங்கு இருக்க வேண்டும்' என்று சொன்னான். க்ருபாவிடம் சென்று பலமாக கன்னத்தில் அறைந்தான்.
"நீ பழைய கணக்கை தீர்க்க வேண்டும் என்று நினைத்து… நீ இப்பொழுது புதிய கணக்கை போட்டிருக்கிறாய். அதிரதன் உன்னுடைய மருமகன்தானே. அவனுக்கு இப்பொழுது தான் திருமணம் ஆகியது என்று சொன்னார்கள். உன்னுடைய பெண்தான் அவனுடைய மனைவி. அப்புறம் என்னை ஒழிக்க வேலை பார்த்து இருக்கிறீர்கள். அதிரதன் வரட்டும் அனைவரையும் அழித்து விடுகிறேன். அந்த வைத்தியன் மட்டும் எங்கே இருக்கிறான் என்பது எனக்கு தெரிந்தே ஆக வேண்டும்"
"அது சரி அந்த ஸ்பெசிமன் பெண் என்ன ஆனாள். அதையாவது சொல்லு" என்று கத்தினாள்.
"அந்த ஸ்பெசிமனுக்கு ஒன்றும் ஆகவில்லையடா… உன்னை அழிப்பதற்காகவே காத்திருக்கிறாள்" என்று கத்தியபடியே புத்தக அலமாரியைப் பிடித்து தள்ளியபடி அபி பாய்ந்து வெளியே வந்தாள். வந்து