துப்பாக்கி அறையிலேயே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாமே என்று யோசித்தார்.
அதிதி வேறு சமையலறையிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை. அவள் வெளியே வந்தால் அவளையும் பிடித்துக் கட்டி வைத்து விடுவார்கள். இது என்ன சோதனை என்று க்ருபாவும் வினயும் நொந்து போனார்கள்.
"அவள் செத்துப் போய்விட்டாளாடா?" என்றும் மீண்டும் அவன் கத்தினான்.
" அது உனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன் உன்னுடைய அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது" என்று திரும்பவும் உரத்த குரலில் சொன்னார்.
அந்த சமயத்தில் இரண்டு விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன.
ஒன்று தாதிபட்டியில் தலைவருடன் பேசிக்கொண்டிருந்த அதிரதன் ஏதோ உள்ளுணர்வு உந்த தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிருபாவின் வீட்டை நோக்கி வரத் தொடங்கினான். அதே சமயத்தில் அபி இருந்த அறைக்குள்ளும் சில மாற்றங்கள் நடந்தன.
அதிதி உள்ளே வந்து அவளுக்கு ஆக்சிஜன் மாஸ்க்கை அணிவித்து நீருக்குள் மூழ்க சொன்ன பொழுது அபிக்கு சிறிது சந்தேகம் வந்துவிட்டது. அவளைப் பொறுத்தவரை இன்னும் அவளுடைய நுட்பமான உணர்வுகள் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. அவளுடைய காட்டு வாழ்க்கையில் அவள் ஆபத்துகளை கடக்க உதவிய அந்த நுண் உணர்வுகள் இப்பொழுதும் அவளுக்கு செயல்பட ஆரம்பித்தன. அதிதியின் கைகள் நடுங்குவதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.
அதற்கேற்றார்போல் அதிதி வெளியே சென்று கதவை தாழிட்டாள். பிறகு எதையோ நகர்த்தி கதவின் அருகில் கொண்டு வந்து நிறுத்துவது புரிந்தது. கதவின் அடியில் இருந்த இருட்டு அவளுக்கு சில விஷயங்கள் புரிய வைத்தது. அவளுடைய அறை கதவு மறைக்கப்படுகிறது.!.
யாருக்கும் தெரிய கூடாது என்றும் அடைக்கப்படுகிறது என்று யோசித்தாள். ஒருவேளை ஜெனிட்டாவை அழித்த அந்த கும்பல் அவளை தேடி வருகிறதோ என்று அவளுக்கு சந்தேகம் தோன்றியது. சட்டென்று நீரிலிருந்து