பொருந்துகிற மாதிரி திட்டமிடுகிறோம். நாளையிலிருந்து கூட அங்க இருந்து வர்ற மாதிரி பிளான் பண்ணி விடலாம். கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்க. நான் ஒரு ரெண்டு மணி நேரத்துல நானும் மாமாவும் முடிவு பண்ணிடறோம்" என்று மகேஸ்வரனை அழைத்து கொண்டு வீட்டில் இருக்கும் அலுவலக அறைக்கு சென்றான்.
"நானும் எங்க வேலைய பாக்கலாம் அல்லவா?" என்று நந்தினியும் விஜயாவும் கிளம்பி சென்றுவிட்டனர்.
அவர் அருகில் இருந்த சத்யா அவரை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
" என்ன அப்படி என்னை பார்க்கிறாய்?" என்றார்
"இதுல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?. நான் மீராவை மறந்திடுவேன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?" என்றார்.
"நீ மீராவை மறக்கணுங்கறது என்னோட நோக்கம் கிடையாது. நாம என்ன பண்ணனும் விலை உயர்ந்த நகைகளை பீரோவில் பத்திரமாக பூட்டி வச்சுக்கணும். எப்போதாவது அதை எடுத்து எடுத்து பாத்துக்கலாம். தேவைபட்டால் பயன்படுத்துவோம். அதே சமயத்தில் தேவையில்லாத குப்பைகளை தூக்கி வெளியே போடாமல் பீரோவில் பூட்டி வச்சுக்குவியா அல்லது டேபிள் மேல் வைத்து எப்ப பார்த்தாலும் உன் கண்ணுல படுற மாதிரி சேர்த்து வைத்திருப்பாயா?. அது போலதான் மீராவைப்பற்றிய இனிமையான நினைவுகளை உன் மனசுக்குள்ள பொத்தி வச்சுக்கோ. எப்ப எல்லாம் உனக்கு தேவைப்படுதே அப்ப நினைச்சு வச்சிடலாம். மறக்கணும்னு நான் சொல்லலை. ஆனா நீ பண்ண முட்டாள்தனத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கக் கூடாது. திரும்பத் திரும்ப அது உனக்கு நினைவுக்கு வந்து கொண்டே இருந்தால் உன்னுடைய தன்னம்பிக்கை போய்விடும். உன்னோட தன்னம்பிக்கைதான் உன்னோட மூலதனம். அடிச்சு நொறுக்கி ஏறி மிதிச்சு ஜெயிச்சு வர வேண்டிய காலகட்டத்தில் நீ முற்றிலும் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தால்… வாழ்க்கையில் தோற்றுப் போய் விடுவாய். நீ தனியா இருந்தா கூட பரவால்ல உனக்குன்னு ஒரு சின்ன குழந்தை வேற இருக்காள்… எதிர்காலத்தில் நீ அவளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
"அந்த காலத்து வக்கில் அல்லவா.. அதனாலதான் இப்படி பாயிண்ட் பாயிண்டாக பேசுறீங்க. ஆனா எனக்கு நீங்க சொல்றதுபோல மாற முடியுமா… எந்த பலனும் இருக்குமா? என்று தோன்றவில்லை. ஆனாலும் எப்பொழுதும் போல உங்கள் வார்த்தையை மனதில் ஏற்றிக்கொண்டு நான் நீங்கள் சொல்லும் திட்டத்திற்கு ஒத்துக் கொள்கிறேன்"
சற்று நிதானித்து பெருமூச்செடுத்து,