"நான் நல்லாத்தான் இருக்கேன் மாமா"
"இன்னும் நல்லா இருந்திருப்பீர்கள். மாப்பிள்ளை!. நான்தான் கவனக்குறைவாக இருந்து விட்டேன். மீராவை அன்று கவனிக்காமல் வெளியே விட்டு விட்டேன். அவள் நேராக அந்த பஸ்ஸில் போய் ஏறியதை பார்த்தாக சொன்னார்கள். அந்த பஸ்தான் விபத்துக்குள்ளானது. அந்த பஸ்ஸில் இருந்தவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர பாக்கி அனைவருமே பஸ் தீப்பற்றி எரிந்ததில் சிக்கி இறந்து விட்டதாகதான் சொன்னார்கள். அவளுடைய உடலை கூட என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டதே' என்று தேம்ப ஆரம்பித்தாள்
"பரவாயில்லை மாமா. சற்று அமைதியாக இருங்கள். இதில் யார் தவறும் இல்லை. எல்லாம் என்னுடைய நேரம்தான்" என்று சத்யா அவரை அமைதிப்படுத்தினான்.
தாத்தா அங்கு நடப்பவற்றை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு நந்தினி காபி கொண்டு வந்து தந்தாள். கொஞ்ச நேரம் பேசிய பின் அவர் மெதுவாக ஆரம்பித்தார்,
" மாப்பிள்ளை சீக்கிரமாக ஒரு முடிவை எடுங்கள். மனுகுட்டி தாய் இல்லாமல் வளரக் கூடாது" என்றார்
"அவள் இப்பொழுது நல்லபடியாக தான் வளர்ந்து கொண்டிருக்கிறாள் மாமா. நீங்கள் சற்று நேரம் அவளிடம் விளையாடி விட்டு செல்லுங்கள்" என்று கடினமான குரலில் சொல்லிவிட்டு தாத்தாவை பார்த்தான்…
அதற்கு அர்த்தம் அவருக்கும் தெரியும். மீராவின் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைக்க அவர் விரும்புகிறார். அவர்களுடைய வாதம் என்னவெனில் மனு குட்டியை அவள்தான் மிகவும் நன்றாக பார்த்துக் கொள்வாள். வேற்று பெண் யாராவது அவனுக்கு மனைவியாக வந்தால் மனுவை சரியாக கவனிக்க மாட்டார்கள் என்று வாதிட்டார்கள். அந்த விஷயம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. அதை அவ்வப்போது வந்து நினைவுபடுத்திக் கொண்டு செல்வார். சத்யா இதற்கெல்லாம் பிடி கொடுத்து பேசவில்லை. அவனும் அவருக்கு மேல் பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.
சற்று நேரம் அவன் போக்கிலேயே பேசிவிட்டு அவர்கள் விடைபெற்றுச் சென்று விட்டனர்.
"மீராவுக்கும் இவர்களுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. அவள் எவ்வளவு இங்கிதமாக நாகரீகமாக நடந்து கொள்வாள். எண்ணங்களும் அப்படிதான் உயர்வாக இருக்கும். இவர் என்னிடம் வந்து திரும்ப திரும்ப இவ்வாறு பேசுவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது தாத்தா"