" சரி விடு மனிதர்கள் நான்கு விதமாகதான் இருப்பார்கள்"
"அண்ணா… இதற்கு இவ்வளவு புலம்புகிறீர்கள். இப்பொழுது சற்று நேரத்தில் அந்த அத்தை வந்து என்ன ஆட்டம் ஆட போகிறார்கள் என்று பாருங்கள். நீங்கள் இத்தனை நாள் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். நீங்கள் எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டீர்களா… இனிமேல் அனைவரும் படையெடுத்து வருவார்கள். உங்களுக்கு பெண் தருகிறேன் பேர்வழி என்று என்னமா பேசுவார்கள். கவனித்து பாருங்கள். அதிலும் அந்த தனு இருக்கிறாளே.. ஒரேடியாக நாடகம் ட்ராமா போடுவாள். மனு குட்டியை கையில் வைத்துக்கொண்டு அவள் போடும் ரட்ராமா இருக்கிறதே … பேசாமல் தாத்தா வீட்டிற்கு சென்று ஓடி ஒளிந்து கொண்டால் நல்லது என்றே எனக்கும் தோன்றுகிறது" என்று நந்தினி சொன்னாள்.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு கார் வாசலில் வந்து நிற்கும் ஓசை கேட்டது.
"வந்துட்டாங்க.." நந்தினி அலுத்துக் கொண்டாள்.
'மனுஊஊஊஊ பேபிஈஈஈஈ' என்று கூக்குரல் கீச்சிடவும்,
அப்பொழுதுதான் நடை பழக ஆரம்பித்திருந்த மனுகுட்டி என்ன நினைத்ததோ தெரியவில்லை… தடாலென்று சோபாவை பிடித்துகொண்டு முடிந்த அளவுக்கு விரைவாக ஓட ஆரம்பித்தது. அவ்விடம் விட்டு விலகி ஓடிப்போய் சோபாவிற்கு பின் ஒளிந்து கொண்டது…
"என் பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ ஓடிப்போய் சோபாவுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டாள. எனக்குதான் ஒளிய இடத்துக்கு இடம் இல்லை" என்று சத்யா மெல்லிய குரலில் கூறினான். நந்தினிக்கு சிரிப்பு வந்தது வாயை மூடிக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். அதற்குள் அதற்குள் அத்தையும் தனுவும் வந்துவிட்டனர்.
சத்யாவை பார்க்கவும்,
" சத்யா மாமா" என்று கத்திக் கொண்டு ஓடி வந்து அவனுடைய காலடியில் அமர்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள். எதையோ சொல்லி புலம்ப ஆரம்பித்தவளிடமிருந்து தப்பித்து செல்வதற்குள் சத்யாவுக்கு பெரும்பாடு ஆகிவிட்டது. கடைசி வரைக்கும் மனு குட்டி சோபாவை விட்டு வெளியே வரவில்லை. அப்பா வந்துதான் அவருடைய தங்கையையும் தங்கை மகளையும் ஒருவாறு சமாதானப்படுத்தி திரும்பவும் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
"தாத்தா ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நாம உங்க வீட்டுக்கு போகலாம். இங்க இருந்து இந்த வீட்டை பூட்டி விட்டு ஓடிப் போயிடலாம். உங்க வீட்டுக்கு யாரும் வரமாட்டாங்க. இவங்களுக்கெல்லாம் உங்களை பார்த்தால் பயம். அப்படின்னு எனக்கு தெரியும் தயவு செய்து