(Reading time: 21 - 41 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"எதற்கு பதற வேண்டும்?. அவள்தான் அந்த விஷயத்தை இரண்டு வாரமாக உன்னிடம் கேட்டுக் கொண்டுதானே இருந்தாள். உன்னை  விட்டு விலக வேண்டும்.. விவாகரத்து வேண்டும் என்று கேட்டுக் கொண்டுதானே இருந்தாள். அதற்காக அவளை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பாயா?" என்று கேட்டார்

"அவளை தடுக்கவோ பயமுறுத்தவோ நான் நினைக்கவில்லை. அந்த நிமிடத்தில் எனக்கு என்ன தோன்றியது என்றால்... என்னுடைய பிரியத்திற்குரிய மீரா என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாள். அதற்காக என்னை விட்டு விலகும் முடிவெடுத்துவிட்டாள். அதுவரை நான் என்ன நினைத்தேன் என்றால் ஏதோ பேச்சு வார்த்தையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தேன். அப்போதுதான் புரிந்தது அவள் செயலிலும் இறங்கி விட்டாள் என்று…   அப்போ அது உஉறுதி ஆக்கப்பட்ட உண்மைதான். ஆனால் அந்த உண்மையின் தாக்கத்தை தாங்க முடியவில்லை. என்னுடைய முழு கட்டுப்பாட்டை இழந்து விட்டேன். அந்த நிமிடத்தில் என்னை நான் மறக்க வேண்டும் என்பது தான் தோன்றியது." கண்களை மூடிக்கொண்டு பேசினான்.

"சட்டென்று அவளை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தேன். ஒரு வேகமாக நடந்தவன் காரில் ஏறி இருக்க வேண்டும்... என்னவோ தெரியவில்லை காரை கடந்தும் என் கட்டுபாட்டை இழந்து நடந்து கொண்டே இருந்தேன். வாசலைத் தாண்டி சாலைக்கு வந்ததும் உணரவில்லை. அங்கு நடந்து கொண்டிருந்த விரைவான போக்குவரத்தை கவனிக்கவில்லை. அப்படியே என்னை ஏதோ தரதரவென்று இழுத்துக் கொண்டு செல்வது போல நான் சென்று கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று கண நேரத்தில் என் மீது மோதியதை உணர்ந்தேன். அப்படியே காற்றில் மேலே பறந்து நான் திரும்ப வரும் பொழுது என்னுடைய கடைசி பார்வையில் மீரா தலையில் கைவைத்துக் கத்திக் கொண்டு இருந்ததை பார்த்தேன். அவள் கண்களில் தெரிந்த பயம் என் மனதிற்குள் நின்றது. அவ்வளவுதான் நான் கீழே விழுந்துவிட்டேன் அப்புறம் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது' என்றான்.

"நீ மீராவிடம் கோபித்துக்கொண்டு  அந்த இடத்தைவிட்டு நடந்தபொழுது சாலையில் வந்திருந்த ஒரு பெரிய லாரி ஒன்று மோதி விட்டது. நீ உயர தூக்கி அடிக்கப்பட்டாய்... மீண்டும் கீழே நீ வந்து விழும் பொழுது அந்த இடத்தில் ஒரு கருங்கல் வேறு இருந்தது. அது சரியாக உன்மீது பட்டிருந்தால் உன்னுடைய உயிருக்கு ஆபத்து ஆகி இருக்கும் ஆனால் என்னவென்று தெரியவில்லை. ஆனால்  நீ கீழே விழும் முன்   இடையில் ஒரு ஆட்டோ வந்து விட்டது. நீ சரியாக அந்த ஆட்டோ மீது விழுந்து விட்டாய். அதனால் ரத்த காயத்துடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.