சுயநலத்திற்காக பலரது வாழ்வினை சிதைத்துவிட்டேன், குற்றவுணர்வால் பீடிக்கப்பட்ட மனம் கண்ணீர் வடித்தது. இது இன்றுத் தொடங்கியது அல்ல...27 ஆண்டுகளுக்கு உட்பட்ட கதை.. அதுவரையிலும் நிம்மதியாக சென்றிருந்தது அவர்களின் வாழ்க்கை!
"எத்தனைமுறை சொல்றது? என்னை எதிர்த்து பேசாதே தேவி! நீ செய்தது தப்புத்தான். வேலை செய்றவங்கன்னா, அவ்வளவு இளக்காரமா? சாரதாக்கிட்ட மன்னிப்புக் கேளு!" இராகவனாரின் தங்கையினைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல் வெற்றிலை மடித்து சுவைத்துக் கொண்டிருந்தார் அகிலாண்டேஷ்வரி. தாயாரின் அலட்சியத்தினைக் கண்டவளின் உள்ளமானதுப் பற்றி எரிந்தது.
"தர்மா? ஒரு வேலைக்காரி முன்னாடி நீங்க என்னையே அவமானப்படுத்துறீங்களா?" மெல்லியதாய் ஔித்தது அவரது குரல். அவரிடத்தில் குரல் உயர்த்த எவரும் துணிந்ததில்லை.
"முடியுமா?முடியாதா?" என்ற தர்மாவின் குரலுக்குக் கட்டுண்டவள், சாரதாவின் முகம் நோக்கி, வெறுப்போடு,
"மன்னித்துவிடு!" என்றுக் கூறிவிட்டு விருட்டென்று உள்ளே சென்றுவிட்டார். கண்கலங்கி நின்றவளைக் கண்டவர், உள்ளே செல்லும்படி சைகைக் காட்ட நன்றியோடு கரம் குவித்துவிட்டு சென்றாள் சாரதா.
"ம்....மாமியாருக்கு ஏற்ற மருமக தான்!" என்று சூசகமாய் உரைத்த அகிலாண்டேஷ்வரியின் வார்த்தைக்குப் புன்னகைத்தவள்,
"அத்தை போதும், எவ்வளவு வெற்றிலை ஒரு நாளைக்கு?உடம்பு என்ன ஆகுறது?" என்று வெற்றிலைப் பெட்டியை வாங்கி வைத்தார் தர்மா.
"என்னம்மா நீ? அங்கே சுற்றி, இங்கே சுற்றி என் தலையில கை வைக்கிற? வெற்றிலை போடுறதை தவிர வேற என்ன வேலை இருக்கு எனக்கு? ம்...பேரன் பேத்திங்க இருந்தா அவங்கக் கூட விளையாடிட்டு இருப்பேன்." என்றதும் முகம் சிவந்துப் போனது அவருக்கு!
"வரட்டும், பட்டணத்துல இருந்து வரானே ஒரு பெரிய மனுஷன்...அவன் தலையில நாலு போட்டு கட்டுடா என் மருமக கழுத்துல தாலியைன்னு உடனே உங்க கல்யாணத்தை முடித்துவிடுறேன்!" கேலியாய் அவர் சிரிக்க, வெளியே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.
"நூறு ஆயுசுடியம்மா உன் வீட்டுக்காரனுக்கு!" என்று அவர் கூற,
"போங்க அத்தை!" என்று எழுந்து, இராகவனின் கண்களுக்குப் புலப்படாத வகையில் சென்று மறைந்துக் கொண்டார் அவர். எண்ணற்ற வண்ணத்துப் பூச்சிகள் ஒரே நேரத்தில் மனதில் சிறகடிப்பதாய் அவருள் ஓர் எண்ணம்! ஆயிரம் மனத்துணிவு ஒரு நங்கைக்கு இருப்பினும், மணங்கொள்ள போகிறவன் எதிரில் அவையெல்லாம் எடுப்படுவதே இல்லை.