"ம்… நான்… ரொம்ப சாரி…"
"எதுக்கு?"
"உங்களுக்கு சப்போர்டாடா நான் எதுவும் சொல்லலை. அக்சுவலா…"
"எனக்கு எதிராகவும் நீ எதுவும் சொல்லவில்லை. அக்சுவலா உனக்கு என் மீது இருக்கும் கோபத்திற்கு என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். யூ ஆர் ஸோ குட்"
அடடா… இவன் இவ்வளவு நல்லவனா?
"உன்னுடைய கோபத்தையும் மறைக்காமல் என்னிடம் காட்டி விட்டாய்… இது எங்கே ஆரம்பித்தது?... நான் உன்னை ஸ்டுப்பிட்னு சொன்னதாலதான… யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும்.. முதல் சந்திப்பிலேயே ஸ்டுப்பிட்னு சொல்வது தவறுதான்."
"?'
"நீ ஆடைகளில் டிசைன் செய்வாயாமே… நந்தினி சொன்னாள்… ரசனையாக நீ சொன்னதற்கு நான்தான் தவறாக ரியாக்ட் செய்து விட்டேன். சாரி…"
அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையிலேயே அவன் நல்லவனோ…
"ஓகே… உன் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நீ நீயாக இருக்கிறாய். இயல்பாக இருக்கிறாய்…. சந்தோசமோ கோபமோ மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படுத்துகிறாய். இப்பகூட சங்கடப்பட்டுட்டு மன்னிப்பு கேட்கிறாய். உங்கிட்ட ஸ்ட்ரெஸ் இல்லை… ஒவ்வொரு நொடியும் உன்னை புதுப்பித்துக் கொள்கிறாய். வெரி குட்… நீ போம்மா… கேரி ஆன்"
அப்பாடா பிரச்சினை முடிந்து விட்டது… ரேச்சல் புன்சிரிப்புடன் கிளம்பினாள். அத்துடன் சத்யனை அடிக்க செங்கலை தேடும் ப்ராஜெக்ட்டையும் ரிஜெக்ட் செய்து விட்டாள்.
இத்தடன் அவர்களின் சண்டை காட்சிகள் முடிவுற்றது என்று நினைக்கிறீர்களா… நோ… நாட் அட் ஆல்…!
சத்யனுடைய தற்காலிக ஸ்டேட் இது… மீராவின் உண்மையான பக்கத்தை தெரிந்து கொண்ட வருத்தம்… கழிவிரக்கம் அத்தனையும் சேர்ந்து ரேச்சல் மீது ஒரு சாஃப்ட் கார்னர் வந்து விட்டது.. அவ்வளவுதான்…
கம்பரிஸன் இல்லை என்றால் உலகம் தலைகீழாக சுத்தி விடும் அல்லவா? ஒரு கோடு… பக்கத்துல பெரிய கோடு… ஈக்வல் டூ… தட் முதல் கோடு பி கேம் சின்ன கோடு தத்துவம்தான்.
தொடரும்
Next episode will be published on 28th July. This series is updated weekly on Tuesday evenings.