(Reading time: 18 - 35 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

வேணாமா… இவள் நமக்கு உதவுவாளா மாட்டாளான்னு…"

"அதான்நீதான் காலை வாரிட்டியேடேச்சல்"

"அந்தாளு முகம் போன போக்கை பார்க்கணுமேஅந்த தாத்தா வேற அவனை முறைச்சுட்டாரு."

"ஆனால் பொய் சொல்றது பாவம் இல்லையா?"

"நான் எங்கேடா பொய் சொன்னேன்"

"ஆனாஉண்மையும் சொல்லலை"

"ஏய்உனக்கு தெரியும்லநான் ரொம்ப நேர்மையானவள்னுஅதுக்காக அவனை சப்போர்ட் பண்ண முடியாதுல்ல…" எடியை சமாளிக்க பார்த்தாள்

அவன் பார்வை மாறவேயில்லை…

"ஏண்டா மூஞ்சியை தூக்கி வச்சுட்டு இருக்கே…"

"டேச்சல்நீ தப்பு பண்ண கூடாதுஎனக்கு பிடிக்காதுகல்பியோட சேர்த்து பேசற அளவுக்கு அந்தாளு மோசம் இல்ல"

"ஆனால் என்னை திட்டினான் தெரியுமா.."

"அதுக்கு நாம வேற ஏதாவது பண்ணியிருக்கனும்…. நீ பண்ணது சரியில்ல.."

"நீ அந்தாளை சப்போர்ட் பண்ற…" கோபம்போல பேசினாள். எடி அமைதியாக ஐஸ்கிரீமை சாப்பிட ஆரம்பித்தான்.

ரேச்சல் மரக்கிளையில் மெல்ல அசைந்தாடினாள்…  எடியின் மௌனம் அவளை பாதித்தது.

"கோபமா எடி"

"படக்குனு நான் அந்தாளு பக்கம் பேசறேன்னு சொல்லிட்டியேநீ தப்பு பண்ணது எனக்கு பிடிக்கலைஅவன் உன்னை நம்பிதான கூப்பிட்டான். இப்படி செய்றது  ஜீஸஸுக்கு பிடிக்காது."

"சரி…. சாரிஎனக்கு புரிஞ்சிட்டது. நான் அதை சரி பண்றேன்…. ஓகேயா"

"சரி.."

"இந்த ஐஸ்கிரீமை அவனை பழி வாங்குனதுக்காக அல்லாமல் உன்னோட பிறந்த நாள் செலிபரேஷனா வச்சுக்குவோம். நீ ஹாப்பியா சாப்பிடு. ம்எங்கிட்ட கோபம் காட்டி கிட்டே ஐஸ்கிரீமை சாப்பிட்டியேதூக்கி போட்டிடுவியோனு நினைச்சேன்"

"எனக்கு டேச்சல் மேலதான் கோபம். ஐஸ்கிரீமை ரொம்ப பிடிக்குமே.. ஏன் தூக்கி போடணும்?"

"தம்பிநீ பிழைச்சுக்குவேடா" என்று சிரித்தாள்.

அத்தோடு விடவில்லை அவனை இறக்கி விடும்போதும்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.