சென்றாள்.
அதைவிட அந்த ரிப்போர்ட் மிக மோசமான செய்தியை பதிவு செய்திருந்தது. அவளுடைய வாழ்நாள் மிக குறைவாக இருக்கும் என்று சொன்னது.
ஒருவேளை அதனால்தான் விவாகரத்து கேட்டாளா?. அதுதான் சத்யனை வேதனைபடுத்தியது.
சாதாரணமாகவே ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது தனக்கு பிரியமானவர்கள் அருகில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். படுத்த படுக்கை எனில் பக்கத்தில் கையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது கம்பர்டபிள் ஆக இருக்கும்… உயிருக்கு ஆபத்தான வியாதி எனில் உயிருக்கு உயிராக இருப்பவரின் மடியில் தலை வைத்து படுத்து ஆறுதல் தேட தோன்றுமே…
ஆனால் இது எதுவுமே மீராவிடம் இல்லை. அவளுக்கு ஒரு சீரியஸ்ஸான வியாதி வந்திருக்கிறது… அதை அவனிடம் சொல்லவுமில்லை… ஆறுதல் தேடவும் இல்லை… பதிலாக விவாகரத்து கேட்டு விலக பார்த்திருக்கிறாள்…
ப்ளடி ஹெல்! வாட்ஸ் கோயிங் ஆன்…?
அவனுடைய உயிர் மனைவி… அவனிடம் பகிர்ந்து ஆறுதல் அடைய வேண்டிய விஷயத்தை சொல்லவில்லை… அவனுக்கு தெரிந்திருந்தால் அவளுக்காக போராடி இருக்க மாட்டானா… உலகில் எட்டு திக்கும் சென்று மருந்து கொணர்ந்திருக்க மாட்டானா… எதுவுமே முடியவில்லை எனில் அவளை தன்னந்தனியாக பரவெளிக்கு அனுப்பாமல் அவனும் கூடவே சென்றி…
இதை நினைக்கும் போது அவனுக்கு சொரேல் என்றது… ஒருவேளை அதற்காகதான் அவனிடம் மறைத்தாளா…
கரெக்ட்… அவன் அவளை வெறுக்கும் விதமாக நடந்ததும் அதற்காகதானா… அவளை அவன் மறக்கும்படி நடந்து கொண்டு… அவளுக்கு ஏதாவது ஆகும்போது.. அது அவனை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டாளா?
அடி முட்டாள் பெண்ணே… நீயில்லாமல் நான் வாழ்வேன் என்று எப்படி நினைத்தாய்…? நீ உயிருடன் இருப்பாய் என்ற நம்பிக்கையில்தானே வாழ்கிறேன்...
அவனுக்கு இன்னும் புரிந்தது… அவனுடைய நல்லதையே நினைக்கும் மனப்பான்மை அவளிடம் இருந்திருக்கிறது.
சத்யனுக்கு இது பிடிக்கும்… இது பிடிக்காது என்று அவள் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். அதில் அவளுக்கு பிடித்த… பிடிக்காதவைகளுக்கு இடமில்லாமல் இருந்திருக்கிறது. அவனும் அதனை கவனிக்காமல் இருந்திருக்கிறான்.
அவளுக்கான உடைகளைகூட அவனே தேர்ந்தெடுத்திருக்கிறான்… நகை… அலங்கார