அவனுடைய மனதில் தோன்றிய குழப்பம் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் அதனை கவனிக்காமல் ரேச்சலின் தோளில் கைவைத்து அவளை இறுக பற்றியபடி,
" நாம் செல்லலாமா?" என்று அவளை ஜெமி அழைத்தான்.
அவர்கள் சிரித்து பேசியபடி நகர… சத்யன் படபடத்து அவ்விடமே உறைந்து நின்றான். அதனை முற்றிலும் கவனித்த ரஞ்சன்..
"எத்தனை முறை சொன்னாலும் அறிவே வர்றது இல்லை" என்று கடுமையாக சொல்ல.. திடுக்கிட்டு தன் நிலைக்கு சத்யன் வந்தான்.
"அந்த தோட்டக்காரன் எங்கே…? இந்த பூந்தொட்டியை இங்கே பாதையில் வைக்க வேண்டாம்.. இடித்து விடும் என்று எத்தனை தடவை சொன்னேன் தெரியுமா?"
என்று சொல்லி கொண்டு நகர்ந்து விட்டான். அது அவனுக்கும் சேர்ந்த வார்த்தைதான். ரேச்சலை பற்றி அவனுக்கு கவலை ஏன்?. இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்… என்று தன்னை அறிவுறுத்திக் கொண்டான்.
தொடரும்
Next episode will be published on 4th Aug. This series is updated weekly on Tuesday evenings.