வளைவில் முகம் பதித்து உறங்க ஆரம்பித்தாள். சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஷீலா… ஒரு விஷயம் மனதிற்குள் எழ குழம்பினார்.
அவருக்கு தெரிந்து ரேச்சல் பயப்பட மாட்டாள். அவரிடம் நெருங்கவும் மாட்டாள்… இவ்வளவு நெருக்கத்தில் அவரிடம் அவள் வந்தது கிடையாது… அவளை தொட்டதுகூட கிடையாது. அவளுடைய உணர்வுகளை ஷேர் செய்ததில்லை… அவருடன் சிரித்து பேசியதில்லை…. அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றபோதும் அருகில்கூட வந்ததில்லை…
ஏன் அப்படி?
ஏனெனில் ரேச்சல் மேத்யூஸின் முதல் மனைவியின் குழந்தை. அவளுக்கு ஆறு வயதாகும்போது அவள் அம்மா இறந்து போகவும்.. ஷீலாவை மேத்யூஸ் திருமணம் செய்து கொண்டார். ரேச்சலின் தாய்வழி பாட்டி அவரிடம் அவளை ஒட்டவே விடவில்லை… ஷீலா முயற்சி செய்தும் அவர் அருகில் வரவே மாட்டாள். ஷீலாவிற்கு குழந்தை இல்லாததால் ரேச்சலை மிகவும் நேசித்தார். ஆனால் அதற்கான பிரதிபலிப்பு அவளிடம் ஒருபோதும் இருந்ததில்லை.
அந்த விபத்திற்கு பிறகு ஆளே மாறி விட்டாளே… அத்துனை அருமையான குழந்தையாக நடந்து கொள்கிறாள்… ரொம்பவும் பிரியம் காட்டுகிறாள்.
அருகில் பூனைகுட்டியைபோல குறுகி படுத்து… அவருடைய வயிற்றில் முகம் புதைத்து புசுபுசுவென்று மூச்சு விட்டுக் கொண்டு படுத்திருந்த ரேச்சலை பார்க்கவும்…
முதன்முறையாக தாய்மை உணர்வு உள்ளுக்குள் பிரவகிக்க.. மூச்செடுத்து ரேச்சலை முத்தமிட்டு.. இறுக கட்டிக் கொண்டு கண்ணில் நீர் வழிய உறங்க ஆரம்பித்தார்.
நன்றி கர்த்தரே… இந்த உறவு போதும்… என்னை ஆசிர்வதித்து விட்டீர்கள்…!
மறுநாள் காலை ஷீலா கிளம்பிக் கொண்டு இருந்தார். அவர் அருகில் வந்த ரேச்சல்….
"மா... நான் எடியை அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். எடி விமான நிலையத்தை பார்த்தால் ரொம்ப என்ஜாய் பண்ணுவான். தலைக்கு மேலே விமானம் பேரிரைச்சலுடன் பறப்பதை அவன் புதிய அனுபவமாக ரசிப்பான்… விடுதி காப்பாளரிடம் அனுமதி வாங்கி எடியை அழைத்துக் கொண்டு வந்தாள்.
வாசலில் அவள் வண்டியை நிறுத்தியபோது… சத்யன் வெளியே வந்தான். அவன் அலுவலகம் கிளம்பி விட்டான் போலிருக்கிறது. காரில் ஏறப் போனவன் எடியை பார்க்கவும் அருகில் வந்தான்.
"ஹாய்… என்ன காலையிலையே அவுட்டிங்கா.."
"ஆங்… அது…" சத்யன் திடீரென வந்து பேசவும் தடுமாறி விட்டான்.