" என்னாச்சு டியர்… "
"ம்… ஒண்ணுமில்லைம்மா… டக்குணு ஏதோ பதட்டமாக இருந்தது." என்றாள். அதன் பிறகு காரில் இயல்பாகி விட்டாள்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த ஷீலாவிற்கு மனதிற்குள் சந்தேகம் எழுந்தது. அவளுக்கு ஏன் திடீரென உடம்பு சில்லிட்டது என்று யோசித்தார்.
ஒருவேளை அந்த பரத் என்பவனை பார்த்ததால் இருக்குமோ?. அவனுடைய பார்வையே சரியில்லையே!. அவரிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் அவனுடைய பார்வை முழுக்க ரேச்சலை தொடர்ந்தது... ஒரு பெண்ணை இப்படி பார்ப்பது தவறு என்று கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். ரேச்சல் நல்ல அழகி என்றாலும் அவ்வாறு விழுங்கி விடுவதுபோல பார்ப்பது தவறு. அதுவும் ஒரு தாயின் முன்னாடி பார்ப்பது மிகவும் தவறு… இதில் உங்களுக்கு வேறு எதுவும் வேண்டுமா என்று வேறு உபசரிக்கிறான். இனி அந்த கடைக்கு செல்ல கூடாது என்று அவர் தீர்மானித்தார்.
வீட்டிற்கு செல்லவும் வாங்கி வந்த அலங்கார பொருட்களை வைத்து வீட்டை அலங்கரிப்பதில் ரேச்சல் மும்முரமாகி விட்டாள். அனைத்தையும் முடித்து இரவு உணவு உண்டு விட்டு படுக்க சென்றனர். மறுநாள் ஜெமி வருவதாக இருந்தது. காலையில் அவனை விமான நிலையத்திற்குச் சென்று பிக்கப் செய்ய வேண்டும். விமான நிலையத்திற்கு இங்கிருந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்தாக வேண்டும். அனைத்தையும் திட்டமிட்டனர்.
"ஓகேம்மா… எல்லாம் ப்ளான்.பண்ணியாச்சு… காலையில் சீக்கிரம் கிளம்பி விடுகிறேன். குட்நைட்" சொல்லி விட்டு ரேச்சல் உறங்க சென்றாள். ஷீலாவும் விளக்கை அணைத்து விட்டு படுத்தார்.
படுக்கைக்கு வந்த ரேச்சல் வழக்கமான ப்ரேயரை சொல்லி விட்டு இறைவனுக்கு நன்றி சொல்லி உறங்க ஆரம்பித்தாள். உறக்கம் கண்களை தழுவும் முன்…
'இன்றைக்கும் கனவில் பூக்காரன் வருவானா?' என்று ரகசிய ஏக்கத்தை மனதில் பதித்தாள். இருளின் குளுமை கண்களில் பரவ உறங்கிப் போனாள்.
அவள் எதிர்பார்த்தபடியே உறங்க ஆரம்பித்தாள். சில நிமிடங்களிலேயே அவளுக்கு கனவு வந்தது. கனவில் புகை மூட்டத்தில் ஒருவன் வருவது தெரிந்தது. அவளுடைய இதயம் படபடத்தது. பூக்காரன்தான் வருகிறானோ என்று ஆர்வமாக பார்த்தாள். ஆனால் அவன் கையில் பூ இல்லை. ஒரு ஆர்வம் தோன்ற அவன் முகத்தை பார்த்தாள்.
அது சத்தியன் இல்லை. வேறு ஒருவன்!. ஜூம் அவுட்டில் இருந்ததால் தெளிவாக அவன்