முகம் தெரியவில்லை… எனினும் கடுமையாக இருந்தது புரிந்தது. அவளை நோக்கி அவன் வெறியுடன் நடந்து வருவது போல இருந்தது.
திடீரென அவளுக்குள் ஒரு பய உணர்வு தோன்றியது அவனால் அவளுக்கு ஆபத்து ஏற்படும் என்று பயந்தாள்.
அவளும் விரைவாக விலக ஆரம்பித்தாள். அவளுடைய நோக்கம் புரிந்தவன்போல அவனும் நடையை வேகமாக்கினான். இருவரும் ஓட்டமும் நடையுமாக விரைய ஒரு கட்டத்தில் அவளை பிடித்து விட்டான். அது… அது… அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பார்த்தவன் அல்லவா?...
அவன் எதற்கு அவளை துரத்த வேண்டும்?. குழப்பத்துடன் அவனை உற்று நோக்க… அப்போதுதான் பார்த்தாள்… அவனுடைய கையில் ஒரு பெரிய கூர்வாள் இருந்தது… அவளை நோக்கி உயர்த்தி பிடித்தான்.
ஒரு கையில் அவளை இறுக பிடித்து மறு கையில் அந்த வாளை பிடித்திருந்தான்.
அது அவளுடைய கழுத்தை குறி பார்ப்பது புரிந்தது… நெஞ்சு படபடக்க… கால்கள் உறைந்து விட… மூச்சு திக்கிட… அவனுடைய பிடியில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக முழு பலத்தையும் திரட்டி திமிறி துள்ளினாள்…
அம்மாடியோ…!. முதுகில் அடிபட்ட உணர்வு… வலி புரண்டு வர… அடப்பாவி! முதுகில் குத்தி விட்டானா… என்று அலறியபடி எழுந்தாள்..
அச்சோ… அது கனவு… அவள் கட்டிலில் இருந்து தரையில் விழுந்திருந்தாள்… இடுப்பும் முதுகும் வலிக்க… தடுமாறி எழுந்தாள்… அது கனவு என்றாலும்… பயத்தில் வேர்த்து விட்டது… தடதடத்த இதயத்தை 'கூல் பேபி… அது கனவுதான்' என்று சாந்தப்படுத்திக் கொண்டு மீண்டும் கட்டிலில் ஏறி படுத்தாள்.
கண்களை மூடிய அடுத்த நொடி… அந்த தடியன் முகம் நினைவிற்கு வர…
"மா…" என்று கத்தியபடி, கட்டிலில் இருந்து குதித்து ஓட்டம் பிடித்தாள். நேராக ஷீலாவின் அறைக்குள் ஓடியவள், அவருடைய படுக்கையில் தாவி ஏறி… அவரை இறுக கட்டிக் கொண்டு… கண்களை மூடிக் கொண்டாள்.
" மா… ப்ளீஸ்… ப்ளீஸ்… இன்னிக்கு மட்டும் உன்கூட தூங்கறேன்.." என்று கிசுகிசுத்தாள்.
அவளை முதுகில் தடவிக் கொடுத்த ஷீலா…
"ரேச்சல் டியர்… கனவு கண்டியா?'
"ஹாங்… ரொம்ப மோசமான கனவு…" மூச்சு வாங்க சொன்னாள்.
"ஓகே… நான் இருக்கேன்ல… பயப்படாதே… தூங்கு" என்றார். அவரை இறுக பிடித்து தோள்