"ஓகே ஈஸி… உனக்கு ஒரு கிஃப்ட் தரணும் என்று நினைத்தேன். மாலை நான் திரும்பி வரும்போது மரத்துல தொங்கி கிட்டு இருப்பாயே… அப்போது தரலாம்னு நினைச்சேன். இப்பவே தந்துடறேன்" பாக்கெட்டில் கை விட்டு அவனிடம் எதையோ நீட்டினான்.
அது ஒரு அழகிய பேனா…
"எடி, இதை வைத்து பரிட்சை எழுதினால் நிறைய மார்க் வாங்குவானாம். ரொம்ப ராசியாக இருக்கும்." என்றான்.
சங்கடமாக அதை வாங்கிக் கொண்டவன்…
"எனக்கு எதுக்கு பரிசு சார்?"
"ஃப்ரண்டோட ஃப்ரண்டு எனக்கும் ஃப்ரண்டுதான்.." .வரிசையான பற்கள் அழகாக தெரிய சத்யன் சிரித்தான்.
அதனை ஆவென்று வாய் திறந்து ஆச்சரியமாக பார்த்தவன்…
"டேச்சல்… நாம இவரு ரொம்ப நல்லவரு… நல்லவேளை அவர் மேல செங்கல்…" பாதியிலேயே நிறுத்தி முழித்தான். அவன் சொல்ல வந்ததை புரிந்நு கொண்ட சத்யன்...
"அந்த ப்ளான் வேற இருந்துச்சா… ஐயா… தம்பி… நாங்கள் சமாதானம் ஆகிட்டோம்… நீங்க மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுத்துடாதீங்க" என்று கெஞ்சுதலாக சொன்னான்.
"அதெல்லாம் பழைய கதை சார். ட்ராப் பண்ணிட்டோம்…. அப்புறம் நாங்கள் இன்று ஏர்போர்ட்டுக்கு போய் ஜெமியை ரிசீவ் செய்ய போகிறோம்"
"யார் அவர்?" சத்யன் கேட்டான்.
"என்னோட கஸின்… யூஎஸ்ஸிலிருந்து வர்றான்."
"டாக்டரம்மாவின் ரிலேஷனா?'
"ம்ஹும்…. அப்பாவோட சிஸ்டர் மகன்." அவளுடைய முகத்தில் மகிழ்ச்சி குமிழிட்டது.
"ஓ… உனக்கு ரொம்ப பிடிக்கும்போல"
"ஹாங்… என்னோட குட் ஃப்ரெண்ட். அப்புறமா வர்றேன்" அவள் கிளம்பினாள். சத்யனுக்கு பை சொல்லி விட்டு எடியை இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினாள். ஒரு பட்டாம் பூச்சி சிறகடித்து பறப்பது போன்ற அந்த காட்சியை பார்த்தபடி காரில் ஏறி கிளம்பினான்.
வீட்டிற்குள் சென்றவள்…
"மா… மனுகுட்டியை பார்த்துட்டு வந்திடறேன்"
சொல்லிவிட்டு பக்கத்து வீட்டிற்கு ஓடினாள். அங்கு மனு குட்டியைத் தூக்கி கொஞ்சினாள். நந்தினியிடம்,