"அப்புறம்…. இங்க வேலை பார்க்கறவங்க எல்லோரும் ஆதரவில்லாத பெண்கள்" என்றாள் ரேச்சல்..
"குட்… தேங்க்ஸ் ரேச்சல் இங்க என்னை கூட்டிட்டு வந்ததுக்கு. உனக்கு பிடிச்சதை ஆர்டர் பணணு. ரெண்டு பேரும் சாப்பிடலாம்."
ரேச்சல் கையேடை பார்க்காமலேயே மிகவும் தெரிந்தவள்போல ஆர்டர் செய்தாள். அவை சாப்பிடவும் சுவையாக இருந்தன.
அந்த இடத்தையும் அந்த உணவையும் இருவரும் ரசித்தனர். சாப்பிட்டு முடித்து பில்லிற்கு பணம் செலுத்திவிட்டு வெளியே வந்தனர். காரில் ஏறியதும்,
"ரேச்சல்… வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கணும்…"
"மா… அதுக்கும் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் தெரியும். ஒவ்வொரு ஃப்ளோரிலும் பிரிவு வச்சிருக்காங்க. அங்கே போகலாம்."
அனைத்து விவரங்களையும் தயாராக வைத்திருக்கிறாளே.. ஆச்சரியமாக பார்த்தார். ரேச்சல் சொன்ன கடைக்கு சென்றனர்.
மதிய நேரமாதலால் ரொம்பவும் கூட்டமில்லை.. அவர்கள் உள்ளே சென்றனர். ஒவ்வொரு ஃப்ளோராகவும் சென்று தேவையானவற்றை வாங்கினர். மூன்றாவது ஃப்ளோரில் திரைசீலைகள்… போர்வைகள் தேர்ந்தெடுத்து விட்டு பில் கவுன்ட்டர் அருகில் வந்தபோது… அவர்களை பார்க்காமல் வந்த ஒருவன் இடித்து விட்டான்.
"ஸாரி… ஸாரி.. மன்னிக்கவும். மேடம் நான் கவனிக்கவில்லை" மன்னிப்பு கேட்டு கீழே கிடந்தவற்றை பொறுக்கி ஷீலாவிடம் நீட்டினான்.
"பரவாயில்லை தம்பி… நாங்களும் கவனிக்கவில்லை…" அவற்றை வாங்கினார்.
"ஊருக்கு புதியவரா… உங்களை நான் பாரத்ததே இல்லை" என்றான்.
"ஆமாம்… பக்கத்து ஊர். சில பொருட்கள் வாங்க வந்தோம்."
"உங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்கள். என்னுடைய பெயர் பரத். இங்கே சூப்பர்வைசராக இருக்கிறேன்." என்றான்.
"நன்றி.. நாங்கள் அனைத்தையும் வாங்கி விட்டோம்" என்றார். அதற்குள் ரேச்சல் பில் தொகையை செலுத்திவிட்டு வந்தாள்.
"நாங்கள் கிளம்புகிறோம்" மகளின் கையை பிடித்துக் கொண்டு ஷீலா கிளம்பினார். ஒரு நொடி அவனை பார்த்துவிட்டு ரேச்சல் கிளம்பினாள்.
கடையை விட்டு வெளியே வரும்போது அவள் கை சட்டென சில்லிட்டதை உணர்ந்தவர்,